திமுக வட்ட செயலாளர் செல்வம் கொலை வழக்கில் பிடி ஆணையில் உள்ள குற்றவாளி உள்ளிட்ட மூன்றுபேர் மடிப்பாக்கதில் கைது, 303 கிலோ கஞ்சா, 3 பட்டா கத்திகள், இரண்டு கார், செல்போன்கள் மோடம் பறிமுதல், பரங்கிமலை துணை ஆணையாளர் பேட்டி:-

சென்னை மடிப்பாக்கம் கைவேளி பகுதியில் காவல் ஆய்வாளர் விஸ்வநாதன் தலைமையில் காவல் துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டபோது இரண்டு கார்கள் நிற்காமல் சென்ற நிலையில் அதனை விரட்டி பிடித்தனர்.

அப்போது அந்த காரில் மூட்டை மூட்டையாக கஞ்சா கடத்தி சென்றது தெரிய வந்த நிலை இரண்டு காரில் இருந்த 3 பேரை பிடித்து விசாரணை செய்தபோது சோழவரம் விஜயநகரை ஏ கேட்டகிரி சேர்ந்த சரித்திர பதிவேடு குற்றவாளி ரஞ்சன் கிஷோர்குமார்(30) இவன் மடிப்பாக்கம் 188 திமுக வட்ட செயளாலர் செல்வம் கொலை வழக்கில் சிறை சென்று கடந்த ஆண்டு இறுதியில் நீதிமன்றத்தில் ஆஜர் ஆகததால் பிடியணை உள்ளது என தெரியவந்தது.

அவனை தொடர்ந்து செங்கல்பட்டு காவல் நிலைய சரித்திர பதிவேடு ஏ.பிளஸ் கேட்ட கிரி குற்றவாளி ஒத்தகண் அசோக்(29), பீர்க்கன்காரணை காவல் நிலைய சரித்திர பதிவேடு குற்றவாளி உதயகுமார்(23) என்பதும் தெரியவந்தது. மேலும் அவர்கள் கடத்தி சென்ற 303 கிலோ கஞ்சா, முன்று பட்டாகத்திகள், 2 கார்கள்,7 செல்போன்கள், 2 மோடம் ஆகியவற்றை பறிமுதல், செய்த நிலையில் அவர்கள் மூன்று பேர்மீதும் பெரிய அளவிலான வணிக நோக்கத்தில் போதைபொருள் கடத்தல் பிரிவு, ஆயுதம் கையாளுதல் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் வழக்குபதிவு செய்து ஆலந்தூர் நிதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.

இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய பரங்கிமலை காவல் துணை ஆணையாளர் சுதாகர்:- மடிப்பாக்கம் அருகே கைவேளி பகுதியில் அதிகாலை வாகன சோதனையின்போது நிற்காமல் சென்ற இரண்டுகார்களை துரத்தி பிடித்த மடிப்பாக்கம் போலீசார் விசாரணை செய்ததில் நிதிமன்ற பிடியாணையில் உள்ள ரஞ்சன் கிஷோர்குமார், ஒத்தகண் அசோக், உதயகுமார் 303 கிலோ கஞ்சார் பறிமுதல் செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

மேலும் இதில் சம்மந்தபட்ட நபர்கள் குறித்தும், வேறு திட்டம் திட்டியுள்ளனரா என விசாரணை செய்யப்படும் அப்படி சம்மந்த பட்டவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

இந்த பெரிய அளவிளான கஞ்சா பறிமுதல், முக்கிய குற்றவாளிகளை பிடித்த காவல் துறையினருக்கு வெகுமதிக்கு பரிந்துறை செய்யப்பட்டுள்ளது என்றார்.