அமைச்சர் தா.மோ. அன்பரசனிடம் வாழ்த்து

செம்பாக்கம் தி.மு.க.வடக்கு பகுதி செயலாளர் ஏ.கே கருணாகரன் தனது பிறந்த நாளை முன்னிட்டு சிறு குறு நடுத்தர தொழில் துறை அமைச்சர் தா.மோ. அன்பரசனிடம் வாழ்த்து பெற்ற போது எடுத்த படம்

தாம்பரம் அருகே வீடு புகுந்து கொள்ளை | 2 பேர் கைது

சென்னை மேற்கு தாம்பரம் அடுத்த ரங்கநாதபுரம் பகுதியை சேர்ந்தவர் சேகர் (60) இவர் வீட்டின் முதல் மாடியில் தனது மனைவி வேளாங்கனி மற்றும் மூத்த மகன் வினோத்குமார் என்பவருடன் வசித்து வருவதாகவும் கீழ் தளத்தில் இளைய மகன் சதீஷ்குமார் அவரது மனைவி ராதா ஆகியோர் வசித்து வருகின்றனர். சென்ற மாதம் தல பொங்கலுக்கு கீழ் தளத்தில் உள்ள தனது மகன் சொந்த ஊர் சென்றிருந்த நிலையில் சேகர் காலை கீழே உள்ள வீட்டை சுத்தம் செய்துவிட்டு சென்றவர் […]

பத்மநாப நகர் கருமாரியம்மன் ஆலயத்தில் ஐயப்ப சுவாமி 51 ஆம் ஆண்டு மலர் பூஜை

குரோம்பேட்டை பத்மநாபன் நகரில் அமைந்திருக்கும் ஸ்ரீ கருமாரியம்மன் ஆலயத்தில் ஸ்ரீ ஐயப்ப சுவாமிக்கு 51 ஆம் ஆண்டு மலர் பூஜை வெகு விமர்சையாக நடைபெற்றது. காலையில் மகா கணபதி ஹோமம், 51 வகை சிறப்பு அபிஷேகம்,சகஸ்ரநாம அர்ச்சனை நடைபெற்று மதியம் ஒரு மணிக்கு மகா தீபாராதனை நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து மதியம் 1.15 மணிக்கு அன்னதானம் நடைபெற்றது. அன்னதான உபயதாரர் சங்கர் கன்ஸ்ட்ரக்ஷன் உரிமையாளர்கள் நித்யா சங்கரநாராயணன் மற்றும் சங்கரநாராயணன் தொடங்கி வைத்து பக்தர்களுக்கு அன்னதானத்தை வழங்கினர். […]

குரோம்பேட்டையில் நடிகை ஆண்ட்ரியா தொடங்கி வைத்த வாக்கத்தான் போட்டி

குரோம்பேட்டையில் பார்வதி மருத்துவமனை சார்பில் அனைவருக்கும் சேர்த்தல் என்ற கருப்பொருளில் ஐந்தாம் ஆண்டு வாக்கத்தான் போட்டியில் முதியவர்கள், மாற்றுத்திறனாளிகள் உட்பட 5000 க்கும் மேற்பட்டோர் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர். இதனை நடிகை ஆண்ட்ரியா, பல்லாவரம் சட்டமன்ற உறுப்பினர் இ.கருணாநிதி ஆகியோர் கொடியசைத்து துவக்கி வைத்தனர். சிட்லபாக்கம் எம். ஐ .டி கல்லூரி விளையாட்டு திடலில் குரோம்பேட்டை பார்வதி மருத்துவமனை சார்பில் அனைவருக்கும் சேர்த்தல் என்ற கருப்பொருளில் அதன் 5வது ஆண்டு பெருநடை (வாக்கத்தான்) போட்டி நடைபெற்றது.சிறப்பு அழைப்பாளர்களாக […]

குரோம்பேட்டையில் ஆசிரியர் வீட்டில் பூட்டை உடைத்து தங்க நகை கொள்ளை

குரோம்பேட்டை போஸ்டல் நகர், தனலட்சுமி தெருவை சேர்ந்தவர் மாலதி ராணி இவர் பொத்தேரி அரசு நடுநிலைப் பள்ளியில் தலைமை ஆசிரியராக பணிபுரிந்து வருகின்றார். இவரது வீட்டில் பால அரவிந்த் என்பவர் மனைவியுடன் வாடகைக்கு தரைதளத்தில் குடியிருந்து வருகிறார்..மாலதி ராணி அடையாரில் உறவினர் வீட்டு துக்க நிகழ்ச்சிக்கு சென்று விட்டார்வாடகைக்கு குடியிருந்த பால அரவிந்த் மனைவி மற்றும் உறவினர்களுடன் வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவை சுற்றி பார்க்க சென்றார்.. இருவரும் இரவு திரும்பி வந்தபோது வீட்டின் கதவுகள் […]

குரோம்பேட்டை ஜிஎஸ்டி ரோட்டில் உள்ள எஸ்கலேட்டர் பழுதாகி உள்ளது. கடந்த ஒரு மாதமாக அது பழுது பார்க்கப்பட வில்லை. நெடுஞ்சாலைத்துறை பழுது பார்க்காததை கண்டித்து குரோம்பேட்டை மக்கள் விழிப்புணர்வு சங்கம் சார்பில் கண்டன முழக்க ஆர்ப்பாட்டம் நடைபெற்றது

அதன் தலைவர் வி. சந்தானம், போலீஸ் கிருஷ்ணமூர்த்தி, வணிகர் சங்க தலைவர் ராமகிருஷ்ணன், அர்கீஸ்வரர் காலனி நலச் சங்கத்தின் செயலாளர் தன்ராஜ் மற்றும் பலர் கலந்து கொண்டு முழக்கம் எழுப்பினர்.

குரோம்பேட்டையில் வழிப்பறி நடைபயிற்சியில் பெண்ணிடம் தங்கச் சங்கிலி பறிப்பு

குரோம்பேட்டையில் நடைபயிற்சிக்குச் சென்ற பெண்ணிடம் 5 பவுன் தங்க சங்கிலியை பறித்து சென்றனர். குரோம்பேட்டை விஜயலட்சுமி நகரை சேர்ந்தவர் சாந்தகுமாரி(59), இவர் குரோம்பேட்டை எம்.ஐ.டி.சிக்னல் அருகே சர்வீஸ் சாலையில் நடைபயிற்சி மேற்கொண்டிருந்தார். அப்போது அவரது பின்னால் இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர் அப்பெண்ணின் கழுத்தில் இருந்த 5 சவரன் தங்கச் சங்கிலியை பறித்துக் கொண்டு தப்பியோடி விட்டார்.இதனால் அதிர்ச்சியடைந்த பெண் கூச்சலிட்டு கத்தினார். பின்னர் பொதுமக்கள் உதவியோடு போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். தகவலின் பேரில் காவல்துறையினர் […]

பஸ் டிரைவரை தாக்கிய சட்டக் கல்லூரி மாணவி வைரல் வீடியோ

குரோம்பேட்டை ஜி.எஸ்.டி சாலையில் மாநகர பேரூந்து ஓட்டுனர், நடத்துனரை தாக்கிய சட்டகல்லூரி மாணவி, அவர் கணவர் உள்ளிட்ட 4 பேரை குரோம்பேட்டை போலீசார் கைதுசெய்தனர். சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி, அதிமுக கொடிகட்டிய காரும் பறிமுதல் தொடந்து விசாரணை திருவான்மியூரில் இருந்து கூடுவாஞ்சேரி செல்லும் தடம் எண் 91V மாநகர பேரூந்தை ஓட்டுனர் அசோக்குமார் ஓட்டி சென்றார். நடத்துனர் இருசப்பன் உள்ளிட்ட பயணிகள் பேரூந்தில் இருந்த நிலையில் குரோம்பேட்டையில் பேரூந்து நிறுத்தத்தில் நிற்க ஓரமாக பேரூந்தை அசோக்குமார் ஓட்டியுள்ளார். […]

குரோம்பேட்டையில் பஸ் ஊழியர்கள் திடீர் மறியல் வழக்கறிஞர்கள் தாக்குதல் எதிரொலி

குரோம்பேட்டை ஜி.எஸ்.டி சாலையில் காரை உரசியதாக அரசு பேருந்து ஓட்டுனர் மற்றும் நடத்துனரை தாக்கிய வழக்கறிஞர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு சென்னை திருவான்மையூரில் இருந்து கூடுவாஞ்சேரி நோக்கி வந்து கொண்டிருந்த அரசு பேருந்தை ஓட்டுனர் இருச்சப்பன் மற்றும் நடத்துனர் அசோக குமார் குரோம்பேட்டை அருகே பயணிகளுடன் சென்று கொண்டிருந்த போது அவ்வழியாக வந்த ஸ்கார்பியோ காரின் மீது உரசியதாக தெரிகிறது. இதனால் ஆத்திரமடைந்து அரசு பேருந்து வழிமறித்து காரில் […]

ராதா நகர் சுரங்கப்பாதை பணிகளை ஆய்வு செய்த உதயநிதி

குரோம்பேட்டையில் கடந்த 10 ஆண்டுகளாக ரூ.43.74 கோடியில் நடைபெறும் ராதாநகர் ரெயில்வே சுரங்கப் பாதை பணிகளை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று திடீரென ஆய்வு மேற்கொண்டார். குரோம்பேட்டை ராதா நகர் ரயில்வே கேட் எல்.சி.,-27 அமைந்துள்ள பகுதியில் சுரங்கப் பாதை 2008ம் ஆண்டு பணிகள் தொடங்கின. ரயில்வே பகுதியில் பணிகள் முடிந்த நிலையில், நெடுஞ்சாலைத் துறைக்கு உட்பட்ட பகுதியில் மேற்கொள்ள வேண்டிய பணிகள் ஆட்சி மாற்றம் காரணமாக 10 ஆண்டுகளுக்கும் மேலாக கிடப்பில் போடப்பட்டன. இந்நிலையில் கடந்த […]