தாம்பரத்தில் ஆறு மாதமாக நகராத படிக்கட்டு

தாம்பரம் சானிடோரியம் பேருந்து நிலையம், தேசிய சித்த மருத்துவம் அருகே உள்ள பொதுமக்கள் சாலை கடக்கும் மேம்பாலத்தின் நகரும் படிக்கட்டு உள்ளது. இது சுமார் ஆறு மாதங்களுக்கு மேலாக வேலை செய்யவில்லை,இது குறித்து புகார் அளித்தால் தற்போது வரை எந்த நடவடிக்கை இல்லை, அதன் அருகே கட்டப்பட்டு வரும் மின் தூக்கி வேலையும் ஆமை வேகத்தில் நடைபெறுகிறது, இதனை உடனடியாக சரி செய்து மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்குமாறு பல்லாவரம் சமூக ஆர்வலர்செய்யது சம்சுதீன்,கோரிக்கை […]

தாம்பரம் அருகே வீடு புகுந்து கொள்ளை | 2 பேர் கைது

சென்னை மேற்கு தாம்பரம் அடுத்த ரங்கநாதபுரம் பகுதியை சேர்ந்தவர் சேகர் (60) இவர் வீட்டின் முதல் மாடியில் தனது மனைவி வேளாங்கனி மற்றும் மூத்த மகன் வினோத்குமார் என்பவருடன் வசித்து வருவதாகவும் கீழ் தளத்தில் இளைய மகன் சதீஷ்குமார் அவரது மனைவி ராதா ஆகியோர் வசித்து வருகின்றனர். சென்ற மாதம் தல பொங்கலுக்கு கீழ் தளத்தில் உள்ள தனது மகன் சொந்த ஊர் சென்றிருந்த நிலையில் சேகர் காலை கீழே உள்ள வீட்டை சுத்தம் செய்துவிட்டு சென்றவர் […]

பல்லாவரத்தில் கருணாநிதி நினைவு நாள்

முத்தமிழ் அறிஞர் கலைஞரின் 6ம் ஆண்டு நினைவு நாள் பல்லாவரம் தொகுதி திமுக சார்பில் குரோம்பேட்டையில் சட்டமன்ற உறுப்பினர் இ.கருணாநிதி தலைமையில் திமுகவினர் மலர்துவி புகழ் அஞ்சலி செலுத்தினார்கள். முத்தமிழ் அறிஞர் கலைஞரின் 6 ம் ஆண்டு நினைவுநாளையொட்டி பல்லாவரம் தொகுதி திமுக சார்பாக குரோம்பேட்டையில் மலர் அளங்காரம் செய்யப்பட்ட கலைஞரின் திரு உருவப்படத்திற்கு சட்டமன்ற உறுப்பினர் இ.கருணாநிதி தலைமையில் தாம்பரம் துணை மேயர் ஜி.காமராஜ், மண்டலகுழு தலைவர்கள் ஜோசப் அண்ணாதுரை, வே.கருணாநிதி பகுதி செயலாளர்கள் பெர்ணட், […]

பாதாள சாக்கடையில் சிக்கிய எரிவாயு லாரி பம்மலில் போக்குவரத்து பாதிப்பு

பல்லாவரம்- அனகாபுத்தூர் பிரதான சாலை பம்மலில் எரிவாயு ஏற்றிசென்ற லாரி பாதளசாக்கடை தோண்டப்பட்டு சரியாக மூடாதசாலையில் சிக்கி சாய்ததால் போக்குவரத்து பாதிப்பு, கிரேன், ஜேசிபி இயந்திரம் கொண்டு மீட்டு வருகிறார்கள். இதனால் இரண்டு மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது. தாம்பரம் மாநகராட்சிகுட்பட்ட பல்லாவரம்- அனகாபுத்தூர் பிரதான சாலை உள்ளது நெடுஞ்சாலை துறை கட்டுப்பாட்டில் உள்ள இந்த சாலை ஏற்கனவே குறுகலாகவும் வளைவு, நெளிவுகள் அதிகமான சாலை, இதற்காக விரிவாக திட்டமிட்ட அதன்பணிகளும் நடைபெறாமல் உள்ளது.இந்த நிலையில் […]

பல்லாவரம் மாணவர் விடுதியில் ஊத்தப்பம் சாப்பிட்டு ஆய்வு செய்த கலெக்டர்

உங்களை தேடி உங்க ஊரில் திட்டத்தில் செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் பல்லாவரத்தில் ஒருநாள் முழுவதும் தங்கி 10 துறைகளை ஆய்வுசெய்தார். பல்லாவரம் நாகல் கேணி அரசு ஆதிதிரவிடர் மணவர்கள் விடுதியில் இரவு உணவை சாப்பிட்டு தரம் குறித்து கேட்டறிந்தார். தமிழக முதலமைச்சர் அறிவித்த உங்களை தேடி உங்க ஊரில் திட்டத்தில் செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் அருண்ராஜ் இன்று காலை முதல் பல்லாவரம் தொகுதியில் தங்கினார். அதனையடுத்து வருவாய், சுகாதாரம், உள்ளாட்சி, சமுக நலன் மகளிர் மேம்பாடு, ஆதிதிராவிடர் […]

பல்லாவரத்தில் மறைமலை அடிகளார் பிறந்த நாள் விழா

தமிழ்வளர்ச்சி துறை சார்பில் தனித்தமிழ் இயக்க தந்தை மறைமலை அடிகளாரின் 148 வது பிறந்தநாள் விழா, அமைச்சர் தா.மோ.அன்பரசன் மாலை அணிவித்து மறியாதை செய்தார் தனித்தமிழ் இயக்கத் தந்தை மறைமலையடிகளாரின் 148வது பிறந்தநாளை யொட்டி பல்லாவரம் மறைமலை அடிகல் தெருவில் உள்ள அவர் வாழ்ந்த இல்லத்தில் தமிழ் வளர்ச்சி துறை சார்பில் அன்னாரின் திரு உருவ சிலைக்கு மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டது. இதில் சிறு குறு நடுத்தர தொழில் நிறுவனங்களின் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன், பல்லாவரம் சட்டமன்ற […]

பொழிச்சலூர் அருகே சாய்பாபா கோவில் கும்பாபிஷேகம்

பொழிச்சலூர் அடுத்த கவுல்பஜாரில் ஸ்ரீ ஆரோக்கிய சாய்பாப கோவில் கட்டப்பட்டு நான்குகால யாகசாலை பூஜைகளுடன் குடமுழுக்கு விமர்சையாக நடைபெற்றது. பொழிச்சலூர் அடுத்த கவுல்பஜார் கிராமத்தில் புதியதாக கட்டப்பட்ட ஸ்ரீ ஆரோக்கிய சாய்பாபா கோவிலில் குடமுழுக்கு நடைபெற்றது. 10ம் தேதி துவங்கி பிரவேசவேலி, புன்யாவகம், கோ பூஜை நடைபெற்ற நிலையில் இன்று வேதவிற்பன்னர்கள் நான்கு கால யாகசாலை பூஜைகளுடன் நடத்திய நிலையில் புனித நீரை கோபுர கலசங்களுக்கு ஊற்றப்பட்டு குடமுழுக்கு நடைபெற்றது. அதனையொட்டி கற்பகிரகத்தில் அமைக்கப்பட்ட வெள்ளை பளிங்கு […]

பல்லாவரம் மேம்பாலத்தில் மருத்துவ மாணவர்கள் கார் கவிழ்ந்து விபத்து

பல்லாவரம் – துரைப்பாக்கம் மேம்பாலத்தில் அதிவேகமாக காரை ஓட்டி வந்து விபத்து ஏற்படுத்திய மருத்துவ கல்லூரி மாணவர்கள் நல்வாய்பாக ஐந்து தனியார் மருத்துவக் கல்லூரி மாணவர்கள் உயிர் தப்பினர். சென்னை பல்லாவரம்-துரைப்பாக்கம் மேம்பாலத்தின் மீது ராமச்சந்திர மருத்துவ கல்லூரியில் படிக்கும் மருத்துவ கல்லூரி மாணவர்கள் மகாபலிபுரத்திலிருந்து சென்னை ஏர்போர்ட் நோக்கி சென்றுள்ளனர். அப்போது ஆந்திர மாநிலத்தை சேர்ந்த ஆதர்ஸ் ரெட்டி (20) அதிவேகமாக காரை ஓட்டிச் சென்றுள்ளனர். அப்பொழுது பல்லாவரம் மேம்பாலத்தின் மீது வந்து கொண்டிருக்கும் போது […]

பல்லாவரம் உணவகத்தில் அடுத்தடுத்து ஷாக் : மின்சாரம் பாய்ந்து ஊழியர் பலி

சென்னையில் தனியார் உணவகத்தில் பணிபுரிந்து வந்த ஊழியர்கள் மூவருக்கு அடுத்தடுத்து மின்சாரம் பாய்ந்து ஷாக் அடித்த நிலையில் திரிபுரா மாநிலத்தை சேர்ந்த இளைஞர் பரிதாபமாக உயிரிழப்பு. சென்னை துரைப்பாக்கம் பல்லாவரம் 200 அடி ரேடியல் சாலையில் உள்ள தனியார் உணவகத்தில் திரிபுரா மாநிலத்தை சேர்ந்தவர்கள் உதவியாளர் மற்றும் ஹவுஸ் கீப்பிங் பணியில் ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில் நேற்று இரவு வழக்கம் போல் உணவகத்தை மூடுவதற்கு முன்பு உயிரிழந்த திரிபுரா மாநிலத்தை சேர்ந்த 24 வயதான தன்குமார், 22 […]