திமுக எம்எல்ஏக்களில் பாதி பேருக்கு சீட் இல்லை

வர இருக்கும் சட்டமன்றத் தேர்தலில் திமுகவில் தகு​தி​யான வேட்​பாளர்​கள் என்ற அளவு​கோல் எடுக்​கப்​பட்​டிருப்​ப​தால் இப்போது உள்ள எம்​எல்​ஏ-க்​களில் பாதிப் பேருக்கு மேல் மீண்​டும் சீட் கிடைக்க வாய்ப்​பில்​லை. சாதிய பின்​னணி, பணபலம், நற்​பெயர், தொகு​தி​யில் தனித்த செல்​வாக்கு உள்​ளிட்ட தகு​தி​களு​டன் இம்​முறை வேட்​பாளர்​களைத் தேடு​கிறது திமுக. இதனால், கட்சி சாராத, கட்​சி​யில் முக்​கிய பத வி​யில் இல்​லாதவர்​களுக்​கும் கூட இம்​முறை வாய்ப்​புக் கிடைக்​கலாம்” என் து கூறப்படுகிறது

அமைச்சர் தா.மோ. அன்பரசனிடம் வாழ்த்து

செம்பாக்கம் தி.மு.க.வடக்கு பகுதி செயலாளர் ஏ.கே கருணாகரன் தனது பிறந்த நாளை முன்னிட்டு சிறு குறு நடுத்தர தொழில் துறை அமைச்சர் தா.மோ. அன்பரசனிடம் வாழ்த்து பெற்ற போது எடுத்த படம்

சர்வதேச போதை கடத்தல் வழக்கு:திமுக நிர்வாகிகளுக்கு சம்மன்

திமுக அயலக அணியைச் சேர்ந்த ஒருவர் சர்வதேச போதை கடத்தல் வழக்கிலும், சர்வதேச போதை கடத்தல் பண பரிமாற்ற வழக்கிலும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவர் கொடுத்த வாக்குமூலம் அடிப்படையிலும், ஆதாரங்கள் அடிப்படையிலும் திமுக நிர்வாகிகளுக்கு சம்மன் அனுப்ப உள்ளதாக டெல்லி வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன. இதற்காக சென்னை உட்பட தமிழகம் முழுவதும் டெல்லியில் இருந்து வரவழைக்கப்பட்டு உள்ளதாக டெல்லி வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.

பிரதமர் மோடிக்கு, முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம்

“ஃபெஞ்சல் புயல், மழை வெள்ளத்தால் ஏற்பட்ட பாதிப்புகளை சரி செய்ய சேதத்தின் வீரியத்தை கருத்தில் கொண்டு, தேசிய பேரிடர் மேலாண்மை நிதியில் இருந்து ரூ.2,000 கோடியை உடனடியாக விடுவிக்க வேண்டும்”

7 பேரை மீட்கும் பணியில் தொய்வு: அமைச்சர் விளக்கம்

திருவண்ணாமலை: திருவண்ணாமலையில் ஏற்பட்ட மண்சரிவில் சிக்கியவர்களை மீட்கும் பணி குறித்து அமைச்சர் எ.வ.வேலு விளக்கம் அளித்துள்ளார். இது தொடர்பாக அவர் பேசியதாவது; இடிபாடுகளில் 7 பேர் சிக்கியுள்ளனர். எப்படியாவது அவர்களை காப்பாற்றியாக வேண்டும் என்று மாவட்ட நிர்வாகம் நேற்று முதல் முயன்று வருகின்றனர். தேசிய பேரிடர் மீட்புபடையினர் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். மழையால் பாதிக்கப்பட்டவர்கள் அரசு பள்ளியில் உள்ள முகாமில் தங்க வைக்கப்பட்டு உள்ளனர். அவர்களுக்கு உணவு வழங்கப்பட்டு வருகிறது. ஒரு பாறை ஒன்று மிகப்பெரிதாக உள்ளது. […]

தூத்துக்குடி மதுரா கோட்ஸ் மில் இன்றுடன் தனது பனியை முடித்துக் கொள்வதாக தகவல்?

நேற்று இரவு 11மணிக்கு மதுரா கோட்ஸ் மில் தூத்துக்குடியில் எல்லா வகையான பணிகளையும் முடிவுக்கு கொண்டு வந்தது. 144 ஆண்டு கால வரலாறு படைத்த புகழ் பெற்ற தொழில் நிறுவனத்திற்கு இப்படி ஒரு நிலமையா?? 1970 களில் அரசு வேலையை நிராகரித்து விட்டு இருமடங்கு சம்பளம் இந்த மில்லில் வாங்கிக் கொண்டு மகிழ்ச்சியாக வாழ்ந்த மில் தொழிலாளர்களின் வாழ்க்கையை நம்மால் மறக்கவே முடியாது. இவர்கள் கூட்டமாக வேலைக்கு செல்லும் அழகே தனி. மேலும் ஹார்வி மில்லில் ( […]

அண்ணா அங்கீகாரம் கொடுத்தார், திமுக என்னை வெளியேற்றிவிட்டது – வைகோ.

திமுகவில் இருந்து வெளியேற்றப்பட்டது தொடர்பாக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கனத்த இதயத்துடன் பேசியுள்ளார். சென்னை எழும்பூரில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ பேசியதாவது:- ஈழத்திற்கு சென்று பிரபாகரனை சந்திக்க வேண்டும் என சீட்டு மூலம் இரண்டு முறை கூறிய பின்னர்தான் பிரபாகரன் நான் ஈழத்திற்கு வர சம்மதம் தெரிவித்தார். அதன் பின்னர் இங்கிருந்து புறப்படும் முன் என் மனைவிக்கு பட்டு புடவை என்னுடைய குழந்தைகளுக்கு புதிய ஆடைகள் எடுத்து கொடுத்தேன். மீண்டும் நான் […]

தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்கம் மற்றும் பள்ளி கல்வித்துறை சங்கங்கள் யாவும் தங்கள் மீதான திமுக அரசின் கவனிப்பற்ற தன்மையைக் கண்டித்து கடந்த வாரம் அறிக்கை வெளியிட்டுள்ளன

பள்ளிகளில் ரெகுலர் ஆசிரியர்கள் போக குறைந்த சம்பளத்தில் ஒப்பந்த ஆசிரியர்கள் நியமித்தல் தவறானது என்றும் இன்னும் பல விதமான கோரிக்கைகளை முன்வைத்து முதல்வரை சந்திக்க சென்றால் அவர்களை ஸ்டாலின் சந்திக்க மறுத்து விட்டார். திமுகவை ஆட்சிக்கட்டிலில்அமர வைத்து அழகு பார்த்தோம்! இப்போது முதல்வராக இருப்பதால் சந்திக்க மறுக்கிறீர்கள் !நீங்கள் எதிர்க்கட்சித் தலைவராக இருந்த போது எங்களை சந்திக்க முடிந்தது. ஆனால் இப்போது மட்டுமென்ன மறுப்பு! அடுத்த தேர்தலில் உங்களை மறுபடியும் எதிர்க்கட்சி தலைவராக்கி வைப்பது தான் சிறந்தது […]

மதுவிலக்கு கொள்கைக்கு ஆதரவான அரசு தி.மு.க., அரசு. தமிழகத்தில் மட்டும் மதுவிலக்கை அமல்படுத்த முடியாத காரியம். அமல்படுத்துவது மத்திய அரசின் கைகளில் தான் உள்ளது. இவ்வாறு அமைச்சர் ரகுபதி கூறினார்