அதிமுக கட்சி அலுவலகம் தீப்பிடித்து எரிந்தது*
திண்டுக்கல், எரியோடு, கடைவீதி பகுதியில் அமைந்துள்ள அதிமுக பேரூர் கழக அலுவலகம் இன்று அதிகாலை திடீரென தீப்பிடித்து எரிந்தது. தகவல் அறிந்த வேடசந்தூர் தீயணைப்புதுறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தீயை அணைத்தனர். எரியோடு காவல் நிலைய போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்
ஆள் கடத்தல் வழக்கு .
ஏடிஜிபி சஸ்பெண்ட் உத்தரவு ரத்து சென்னையில் ஆள் கடத்தல் வழக்கு தொடர்பாக உயர்நீதிமன்ற உத்தரவுபடி ஏடிஜிபி ஜெயராம் சஸ்பெண்ட் செய்யப்பட்ட அவரை கைது செய்தனர்.இதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது உச்ச நீதிமன்றம் அவரை சஸ்பெண்ட் செய்ததை ரத்து செய்தது.மாநில அரசு வேண்டுமானால் சஸ்பெண்ட் செய்யலாம் ஆனால் உயர் நீதிமன்றம் ஹஸ்பண்ட் உத்தரவு பிறப்பிக்க முடியாது என்று உச்ச நீதிமன்றம் கூறியது
தாம்பரம் அடுத்த சிட்லப்பாக்கத்தில் தீவிபத்தில் முழுவதும் எரிந்த ஏ.டி.எம் இயந்திரத்தில் 8லட்சத்து 35 ஆயிரம் பணம் எரியாமல் தப்பியது அதிகாரிகள் முன்னிலையில் இயந்திரம் உடைத்து திறந்து பார்த்த அதிகாரிகள் மகிழ்ச்சி
சென்னை தாம்பரம் அடுத்த சிட்லபாக்கம் அண்ணா தெருவில் எச்.டி.எப்.சி வங்கி ஏ.டி.எம் மை 19ம் தேதி யில் சிசிடிவி பழுது பார்க்க பிரகாஷ் என்கிற ஊழியர் ஈடுபட்டார், அப்போது ஏ.சி உள்பகுதி இயந்திரத்தில் தீபற்றியதால் பிரகாஷ் வெளியேறினார், தீயணைப்பு வாகனத்தில் தீயை அணைத்த நிலையில் ஏ.டி.எம் முழுவதும்ம் எரிந்தது, மேலும் கட்டிட உள்பகுதி முழுவதிலும் சேதமானது, எச்.டி.எப்.சி வங்கி சார்பில் அந்த ஏ.டி.எம் இயந்திரத்தில் 8 லட்சத்து 35 ஆயிரத்து 500 ரூபாய் இருக்க வேண்டும் ஆனால் […]
ரூ. 1000 லஞ்சம் வாங்கிய 2 போலீஸ்காரர்கள் நீக்கம்
காஞ்சிபுரம் மாவட்டம் படப்பை பத்திர பதிவு அலுவலக அருகே சிந்தாரிப்பேட்டை பகுதியைச் சேர்ந்த வியாபாரி முஷாமல் முகமது என்பவர் படப்பை அருகே ஒரு இடத்தை வாங்கி பத்திரப்பதிவு செய்வதற்காக தான் கொண்டு வந்த கார் டிக்கியில் 6 லட்சம் ரூபாய் பணத்தை வைத்து விட்டு.பத்திரபதிவு அலுவலகத்திற்குள் சென்று தன் வாங்கிய இடத்திற்கு கையெழுத்து போட்டுவிட்டு வெளியே வந்து பார்த்தபோது காரின் டிரைவர் கண்ணாடி உடைக்கப்பட்டு காரின் டிக்கி திறக்கப்பட்டு அதிலிருந்து 6 லட்ச ரூபாய் பணத்தை திருடி […]
ஒரே நாளில் பதவி உயர்வு பெற்ற IPS ஜோடி
. IPS ஜோடியான வருண்குமார், வந்திதா பாண்டே இருவரும் ஒரே நாளில் DIGஆக பதவி உயர்வு பெற்றுள்ளனர். ▪️. 2011 பேட்ச்சை சேர்ந்த இவர்கள் காதலித்து திருமணம் செய்து கொண்டவர்கள். அருகருகே உள்ள திருச்சி – புதுக்கோட்டை மாவட்டங்களில் SPக்களாக பணியாற்றி வந்த நிலையில், இனி முறையே திருச்சி – திண்டுக்கல் சரக DIGகளாக பணியாற்ற உள்ளனர். இவர்கள் நாதக கட்சியினரால் சமூக வலைதள தாக்குதலுக்கு உள்ளானது குறிப்பிடத்தக்கது.
உடை மாற்றும் அறையில் ரகசிய கேமரா வைத்து பெண்களின் அந்தரங்கப் பதிவு வலைத்தளங்களில் பகிரப்பட்டதா? கைதான 2 பேரின் உறவினர்கள், நண்பர்களின் செல்போன்கள் ஆய்வு

ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் அக்னி தீர்த்தக் கடற்கரை பகுதியில் பக்தர்கள், சுற்றுலாப் பயணிகள் உடை மாற்றுவதற்கு தனியார் உடை மாற்று அறைகள் உள்ளன. கடந்த 23ம் தேதி புதுக்கோட்டை பக்தர் ஒருவரின் குடும்பத்தினர் உடை மாற்றியபோது, அறையில் ரகசிய கேமரா வைக்கப்பட்டிருந்தது தெரிந்தது. இதுதொடர்பாக அளித்த புகாரின்பேரில், கோயில் போலீசார் ராமேஸ்வரத்தை சேர்ந்த ராஜேஷ் கண்ணன் (34), மீரா மைதீன் (36) ஆகிய இருவரை கைது செய்து ராமநாதபுரம் சிறையில் அடைத்தனர். இவர்களிடமிருந்து ரகசிய கேமராக்கள், செல்போன், மெமரி […]
தவெக மாநாட்டில் பங்கேற்ற நிர்வாகிகளை நுண்ணறிவு பிரிவு போலீசார் தொடர்பு கொண்டு தகவல்களை சேகரித்ததாக தகவல்

சென்னையில் இருந்து நிர்வாகிகள் எவ்வளவு பேர் மாநாட்டில் கலந்து கொண்டார்கள் என்பது குறித்து தகவல்கள் சேகரித்து வருவதாக தகவல் சென்னையில் தவெக தொண்டர்கள் எத்தனை பேர் உள்ளனர் என்பது குறித்தும் விவரங்களை சேகரித்து வருவதாக தகவல்.
“சென்னையில் உள்ள அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் போலீஸ் பூத் அமைக்கபடும்;

-ஒவ்வொரு போலீஸ் பூத்திலும் 10 காவலர்கள் பணியமர்த்தப்படுவார்கள் சென்னை காவல் ஆணையரகம்
மருத்துவரைக் குத்தியது ஏன்? – விக்னேஷ் வாக்குமூலம்.
மருத்துவரை கத்தியால் குத்த வேண்டும் என்று திட்டமிட்டு வீட்டிலிருந்தே கத்தி எடுத்து வந்தேன். தாயார் வலியால் துடித்ததை தாங்கிக் கொள்ள முடியாததால் காய்கறி வெட்டும் கத்தியை எடுத்து வந்து மருத்துவரை குத்தியதாக விக்னேஷ் வாக்குமூலம் – காவல்துறை தகவல் ஹீமோ சிகிச்சை அளவுக்கு அதிகமாக அளித்ததால்தான் தாயாருக்கு உடல்நிலை பாதிப்பு என மருத்துவருடன் விக்னேஷ் வாக்குவாதம்.
திண்டுக்கல்லில் போலீசாரிடமிருந்து தப்ப முயன்ற வாலிபருக்கு துப்பாக்கி சூடு
திண்டுக்கல்லில் வாலிபர் இர்பான் கொலை வழக்கில் தொடர்புடைய ரிச்சர்ட் சச்சின் போலீசாரை தாக்கி தப்ப முயன்ற போது தனிப்படை போலீசார் முழங்காலில் சுட்டு பிடித்தனர். படுகாயம் அடைந்த வாலிபர் திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். ரவுடி தாக்கியதில் காவலர் அருண் என்பவர் படுகாயம்