
காஞ்சிபுரம் அருகே சின்னிவாக்கம் கிராமத்தில் நண்பர்களுடன் சாலையில் விளையாடிக் கொண்டிருந்த சிறுவனை நாய் கடித்ததில் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு. சிகிச்சைக்கு பயந்து பெற்றோரிடம் நாய் கடிதத்தை மறுத்தால் ரேபிஸ் நோய் முற்றி உயிரிழந்த சோகம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் அருகே சின்னிவாக்கம் கிராமத்தைச் சேர்ந்த பாஸ்கர் என்பவரின் மகன் சபரிவாசன் (15) என்ற சிறுவன் அதே பகுதியில் அரசு பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு பயின்று வருகிறார்.
இந்த நிலையில் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு வீட்டின் வெளியே நண்பர்களுடன் விளையாடிக் கொண்டிருந்த போது அதே பகுதியில் இருந்த வெறி நாய் ஒன்று கடித்ததில் லேசான காயங்களுடன் சபரிவாசன் தப்பியுள்ளார். நாய் கடித்ததை பெற்றவரிடம் கூறினால் அடிப்பார்கள் என எண்ணி சபரி வாசன் நாய் கடித்ததை வீட்டில் சொல்லாமல் மறைத்துள்ளார்.
இதனுடைய கடந்த சில தினங்களுக்கு முன்பு சபரிவாசனின் செயல் சற்று மாறுபட்டு காணப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து சிறுவனின் தந்தை பாஸ்கர் அவனை மீட்டு காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளார். இந்த நிலையில் ரேபிஸ் நோய் தலைக்கு ஏறி மிகவும் பரிதாபக் கூடிய நிலையில், சபரிவாசன் நாய் போன்று செயலை ஈடுபட்டதால், உடனடியாக சபரி வாசனை மெயில் சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டார்.
செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில், சிகிச்சை அளித்தும் உடல்நிலை சீராகாததால் உடனடியாக சபரிவாசனை சென்னை அரசு மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். தொடர்ந்து மருத்துவ கண்காணிப்பாளர் இறந்த நிலையில் சபரி வாசன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். சிகிச்சை பலனின்றி பலியானது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.