தங்கப்புதையல் கிடைத்து இருப்பதாக கூறி போலி நகைகளை கொடுத்து மோசடியில் ஈடுபட்டு வந்த கர்நாடக மாண்டிய மாவட்ட கும்பலை சேர்ந்த பெண் ஒருவரை தாம்பரம் போலீசார் கைது செய்தனர் தலைமறைவாக உள்ள கும்பலுக்கு வலைவீசி தேடி வருகின்றனர்.

சென்னை தி நகர் பகுதியைச் சேர்ந்த மாற்று திறானாளியான ருக்மணி இவர் கணவர் ராமநாதன் இவர்கள் நடத்திய ஜெராக்ஸ் கடைக்கு கடந்த 14? தேதி வந்த இரண்டு ஆண் நபர்கள் சார்ஜர், ஹெட்போன் என சிறிய சிறிய பொருட்களை வாங்கி ருக்குமணியிடம் பேசி பழகியுள்ளனர்.
மேலும் முன்பாக கட்டிட வேலை செய்யும்போது புதயல் கிடைத்ததாக கூறி இருவரும் பேசிய அவர்கள் ருக்குமணியை அனுகி தங்களுக்கு பணம் தேவை புதயல் என்பதால் யாரிடமும் சொல்லாம் நகைகை வாங்கிகொள்ள கூறியுள்ளனர்.

12 லட்சம் கேட்டு 8 லட்சத்திற்கு முடித்த நிலையில் ருக்குமணி, ராமநாதன் தம்பதியிடம் சிறிய அளவு தங்கத்தை கொடுத்துள்ளனர்.

நகைக்கடைக்கு கொண்டு சோதித்தபோது தங்கம் என உறுதியானதால் வாங்கிகொள்ள ருக்குமணி ஒத்துக்கொண்டார்.

தாம்பரத்தில் உள்ள தனியார் உணவகத்தில் வைத்து பெண் உள்ளிட்ட 3பேரிடம் 6.5 லட்சத்தை 24ம் தேதி கொடுத்தவுடன் மீதமுள்ள செயினை கொடுத்துள்ளார்.

அதனை நேரிடையாக சோதனை செய்தபோது முற்றிலும் போலி என தெரிந்ததால் தாம்பரம் காவல் நிலையத்தில் புகார் தெரிவித்தார்.

இதனால் அங்குள்ள சிசிடிவி காட்சிகள், செல்போன் எண்கள் வைத்து விசரணையை துவக்கிய நிலையில் செங்கல்பட்டு மாவட்டம் ஆப்பூர் பகுதியில் பதுங்கி இருப்பதை கண்டுபிடித்துள்ளனர்.

அங்கு சென்று போலீசார் சோதனை நடத்திய போது அந்த கும்பல் அங்கிருந்து தலைமறைவாக இருப்பது தெரியவந்துள்ளது. மேலும் அவர்கள் சோதனை செய்தபோது ஒரு வீட்டில் பதுங்கி இருந்த பெண் ஒருவரை மட்டும் போலீசார் கைது செய்துள்ளனர். அவரை காவல் நிலையம் வைத்து விசாரணை மேற்கொண்ட போது கீதா (வயது-47) கர்நாடக மாநிலம் மாண்டியாவை சார்ந்தவர் என்பது தெரியவந்துள்ளது.

மேலும் கீதாவிடம் இருந்து செல்போன்கள் போலி நகைகள் 5.5 லட்சம் பணம் ஆகியவற்றை பறிமுதல் செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் சென்னையில் பல்வேறு பகுதிகளுக்கு இந்த கும்பல் ஊடுருவி மோசடி ஈடுபட்டு வருவதாகவும் எனவே பொதுமக்கள் கவனத்துடன் இருக்க வேண்டும் எனவும் போலீசார் எச்சரித்துள்ளனர்.

தொடர்ந்து தப்பி ஓடிய ரோஹித், கிட்டா ஆகிய இரண்டு நபர்கள் நபர்களையும் போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர் இச்சம்பவம் தாம்பரத்தில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.

மாற்று திறனாளி பெண் என்றும் பாராமல் அவரின் நகை வீட்டில் உள்ள பொருட்களை சில தினங்களுக்குள் விற்பனை செய்து பணம் தயார் செய்யும் அளவு தன்னை முளைச்சலவை செய்ததாகவும் என்ன சொன்னாலும் கேட்கும் விதமாக அவர்கள் தன்னை மனதளவில் பலவீனப்படுத்தியதாக அப்பெண் கண் கலங்க கூறினார், போலீசாரின் தீவிர விசாரணையில் ஒரு பெண் 5.5 லட்சம் மீட்கப்பட்டதாகவும் ரோஹித், கிட்டா ஆகிய இருவர் பிடிப்பட்டால் மேலும் சிலர் சிக்கலாம் என குறினார்.