காலையிலும் இரவு வேளையிலும் சீரகத் தண்ணீர் ஒரு டம்ளர் வீதம் குடித்தால் நல்ல பலன் கிடைக்கும்.வழக்கமாக நாம் சாப்பி டும் போது உணவுடன் கொஞ் சம் காற்றையும் விழுங்கி விடுகி றோம் அது வயிற்றில் சேர்ந்து விடுகிறது. அதிலும் அவசர அவசரமாக உண்ணும் போது, பேசிக் கொண்டே உண்ணும் போது, காற்றடைத்த பானங் களை குடிக்கும் போது , தண் ணீர் அண்ணாந்து குடிக்கும் போது இந்த காற்று விழுங்கும் அளவு அதிகமாக இருக்கும். இன்னும் உணவில் வெங்காயம், முட்டைக்கோஸ், காலிஃப்ளவர், பச்சை பட்டாணி, அவரை, எண்ணெயில் பொரித்த உணவு கள், இவைஅதிகமான வாயுவை செரிமானத்தின்போது உருவாக் குகிறது. மசாலா பொருட்கள், வயிற்றில் தங்கி உள்ள காற்றை வெளிப்படுத்துகிறது. இதற்கான எளிய சித்த மருத்துவம் வரு மாறு:-1) மோருடன் பெருங்காயம், சீர கம், சேர்த்து குடிக்க வேண்டும்.2) காலை மற்றும் இரவு வேளையில் சீரகத் தண்ணீர் ஒரு டம்ளர் வீதம் குடிக்க வேண்டும்.3) சித்த மருத்துவத் தில் அஸ்டாதி சூரணம்-1 கிராம் வீதம் காலை, இரவு, இள வெது வெதுப்பான வெந்நீரில் கலந்து குடிக்க வேண்டும்.3) காலை, மதியம் வேளைகளில் உணவு உண்டவுடன் ஒரு குறுநடை போட்டு அதன் பிறகு உட்கார வேண்டும், இரவு சாப்பிட்ட பிறகும் ஒரு குறுநடை நடந்து, ஒரு மணி நேரம் கழித்து தான் தூங்க வேண்டும்.4) இளஞ்சூடான வெந்நீர் குடிப்பது வயிறு பிரச்சனைகளுக்கு சிறந் தது. 5) உணவில் மோர், தயிர், சுண்டைக்காய் வற்றல், மணத் தக்காளி வற்றல், கருவேப்பிலை பொடி, பிரண்டைத் தண்டு துவையல் ஆகியவற்றை சேர்த்துக்கொள்ள வேண்டும்.