
பெருங்களத்தூரில் செல்போனில் பேசியபடி தண்டவாளத்தை கடந்த பெண் ஐ.டி பொறியாளர் மீது அந்தியோதையா விரைவு ரெயில் மோதி உயிரிழப்பு
ஆந்திராவை சேர்ந்த பெண் மென் பொறியாளர் பிள்ளி தாரணி சத்தியா(23) சென்னையை அடுத்த பெருங்களத்தூர் உள்ள ஐ.டி கம்பெணியில் பணி செய்கிறார்.
இன்று காலை பெருங்களத்தூர ரெயில் கேட் அருகே செல்போனில் பேசியபடி சென்ற தண்டவாளத்தை கடந்தபோது திருநெல்வேலியில் இருந்து தாம்பரம் நோக்கிவந்த அந்தியோதைய விரைவு ரெயில் மோதி சம்பவ இடத்திலே உயிரிழந்தார்.
பிரேதத்தை கைப்பற்றி தாம்பரம் ரெயில்வே போலீசார் விசாரணை செய்து வருகிறார்கள்.
வண்டலூர், பெருங்களத்தூ, இரும்புலியூர் ஆகிய பகுதிகளில் பெரும்பாலும் பெண்கள், இளைஞர்கள் இதுபோல் தடைசெய்யப்பட்ட ரெயில் தண்டவாளங்களை கடக்கும் போது செல்போனில் பேசிய்படியும், பாட்டு கேட்டப்படியும் கடப்பதால் ரெயில் விபத்துகளில் சிக்கி உயிரிழப்புகள் ஏற்படுவது அதிகரித்துள்ளது.