பஸ் மீது மோதல் :சேலையூர் போக்குவரத்து எஸ்ஐ உயிரிழப்பு
சென்னை புதுப்பேட்டை காவலர் குடியிருப்பில் குடும்பத்துடன் வசித்து வருபவர் சிவகுமார் (வயது- 53) இவர் தாம்பரம் மாநகர காவல் ஆணையரகத்திற்கு உட்பட்ட சேலையூர் போக்குவரத்து சிறப்பு உதவியாளராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் நேற்று இரவு பணியில் இருந்த சிறப்பு உதவி ஆய்வாளர் சிவகுமார் பணி முடிந்து இன்று அதிகாலை தனது இரு சக்கர வாகனத்தில் வீட்டிற்கு சென்று கொண்டிருந்துள்ளார்,அப்போது ஆலந்தூர் அருகே ஆசர்கான பேருந்து நிலையத்தில் நின்று கொண்டு இருந்த தனியார் பேருந்தில் பின்னால் எதிபாரதவிதமாக விதமாக […]
பள்ளிக்கரணையில் பரிதாபம் : பாதாள சாக்கடை தோண்டும் போது மண் சரிந்து ஒருவர் பலி
சென்னை பள்ளிக்கரணை பாரதிதாசன் 2வது தெருவில் மெட்ரோ வாட்டர் சார்பில் பாதாள சாக்கடைக்காக பள்ளம் தோண்டும் பணி நடைபெற்று வந்தது திடீரென மண் சரிவு ஏற்பட்டதில் பணியில் ஈடுபட்ட திருப்பத்தூர் மாவட்டத்தை சேர்ந்த அன்பு(59) என்பவரும் திருப்பதி என்பவரும் மண் சரிவில் சிக்கிக்கொண்டனர்.பணியில் இருந்த மற்ற ஊழியர்கள் காப்பாற்ற முயற்சி செய்தும் பலனளிக்காததால் உடனடியாக பள்ளிக்கரணை காவல் நிலையம் மற்றும் மேடவாக்கம் தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவித்தனர்.சம்பவ இடத்திற்கு வந்த பள்ளிக்கரணை போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினர் […]
மரத்தில் வேன் மோதி 7 பேர் பலி: திருச்செந்தூர் கோயிலுக்கு சென்று திரும்பியபோது சோகம்

உளுந்தூர்பேட்டை: திருச்செந்தூர் முருகன் கோயிலுக்கு சென்று திரும்பிய சுற்றுலா வேன் மரத்தில் மோதி 7பேர் பரிதாபமாக இறந்தனர். ராணிப்பேட்டை மாவட்டம் கலவை தாலுகா மாம்பாக்கம் கிராமத்தை சேர்ந்த 22 பேர் ஒரு சுற்றுலா வேனில் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலுக்கு சென்றனர். வேனை வசந்தகுமார் (23) என்பவர் ஓட்டினார். கோயிலுக்கு சென்றுவிட்டு சொந்த ஊருக்கு நேற்று முன்தினம் இரவு திரும்பி கொண்டிருந்தனர். நேற்று அதிகாலை கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை, மேட்டத்தூர் அருகே சென்றபோது திடீரென நிலை தடுமாறி […]
தடுப்புச் சுவரில் வாகனம் மோதல் மனைவி கண் முன்பே கணவர் பலி

தாம்பரம் அருகே சாலையோர தடுப்பு சுவற்றில் இருசக்கர வாகனம் மோதி விபத்தில் மனைவி கண் முன்னே கணவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டத்தை சேர்ந்தவர்கள் விஜயகுமார் (40) – குணசுந்தரி (32) தம்பதியினர்.இருவரும் இன்று அதிகாலை சுமார் ஒரு மணி அளவில் அவர்களது இருசக்கர வாகனத்தில் மின்டிலிருந்து, கடலூருக்கு மதுரவாயல் பைபாஸ் சாலை வழியாக சென்றுள்ளனர். அப்போது தாம்பரம், இரும்புலியூர் பாலத்தின் மேல் அதிவேகமாக வந்தபோது கட்டுபட்டை இழந்த இரு சக்கர வாகனம் சாலையின் […]
கோவை நாயகன் புதூர் பகுதியில் உள்ள பர்னிச்சர் கடையில் தீ விபத்து!

தீயணைப்பு வாகனங்களில் வந்த தீயணைப்பு வீரர்கள் தீயை போராடி அனைத்து வருகின்றனர். தீ விபத்து குறித்து சரவணம்பட்டி போலீசார் சம்பவ இடத்தில் தீவிர விசாரணை!
கோவை மேட்டுப்பாளையம் அருகே சாலை விபத்தில் சிக்கிய கார், பள்ளத்தில் கவிழ்ந்து தீப்பிடித்து எரிந்தது

அன்னூர் பிரதான சாலையில் பாலத்தின் மீது மோதிய வேகத்தில் பள்ளத்தில் விழுந்து தீப்பிடித்து எரிந்த கார் – டிரைவர் உடல்கருகி பலி இருக்கையில் அமர்ந்தபடியே கார் ஓட்டுநர் உடல்கருகி உயிரிழந்தார் – இறந்தவர் யார்? என விசாரணை
தனியார் கம்பெனி பஸ் மோதியதில் கணவருடன் ஆசிரியை பலி

கேளம்பாக்கம் அருகே சோனலூரில் இருசக்கர வாகனம் மீது தனியார் கம்பெனி பேரூந்து மோதியதில் சம்பவ இடத்திலேயே கணவன் மனைவி உயிரிழப்பு. தனியார் கம்பெனி பேரூந்து நிற்காமல் சென்ற நிலையில் பணியாளர்களை ஏற்றியவாறு மீண்டும் அதே வழியில் வந்தபோது ஓட்டுனர் கோட்டிஸ்வரன்(44) கைது. உயிரிழந்த தமோதரன்(53) மாமல்லபுரம் நகராட்சியில் துப்புரவு கண்காணிப்பாளராகவும், அவர் மனைவி ஜெயதுர்கா(47) செயிண்ட் மேரிஸ் பள்ளியில் ஆசிரியராகவும் பணியாற்றி வந்தனர், இவர்களின் சொந்த வீடு தாம்பரம் மாடம்பாக்கத்தில் இருந்த நிலையில் அங்கு மகள் வசித்துவருகிறார். […]
முடிச்சூரில் தக்காளி லாரி மோதி தூய்மை பணியாளர் உயிர் இழப்பு

தாம்பரம் முடிச்சூர் சாலை மேம்பாலம் அருகே சாலையில் குப்பைகளை அகற்றி கொண்டிருந்த துப்புரவு தொழிலாளிகள் மீது தக்காளி ஏற்றி வந்த சரக்கு வாகனம் மோதி விபத்து சம்பவ இடத்திலேயே துப்புரவு தொழிலாளி தர்மன் என்ற தர்மு வயது 35 உயிர் இழப்பு மேலும் இரண்டு தொழிலாளர்கள் படுகாயம் தொழிலாளிகள் குடும்பத்தினர் கதறல் சென்னை அடுத்த தாம்பரம் மாநகராட்சி உட்பட்ட தாம்பரம் முடிச்சூர் மேம்பாலம் இறக்கத்தில் தாம்பரம் மாநகராட்சி ஒப்பந்த துப்புரவு பணியாளர்கள் இன்று காலை துப்புரவு பணி […]
திருவான்மியூர் கோபுரத்தில் ஏறி சுத்தம் செய்தவர் கீழே விழுந்து பலி

திருவான்மியூர் மருந்தீஸ்வரர் கோயிலில் நேற்று மாலை கோபுரத்தில் இருந்து தவறி விழுந்து சிவனடியார் உயிரிழப்பு உழவாரப் பணி செய்தபோது நேர்ந்த துயரம் திருவான்மியூரில் உள்ள மருந்தீஸ்வரர் கோயிலில்( உழவாரப்பணி) சுத்தம் செய்வதற்காக சிவனடியார்கள் சுமார் 30 நபர்கள் இன்று வந்தனர். இதில் கொட்டிவாக்கத்தைச் சேர்ந்த பழனி(44) என்பவர் கோபுரத்தில் ஏரி சுத்தம் செய்யும்போது தவறி கீழே விழுந்துள்ளார். தலையில் அடிபட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் ராயப்பேட்டை மருத்துவமனைக்கு அழைத்து சென்று சிகிச்சைக்கு சேர்த்தனர். சிகிச்சை பலனின்றி சற்றுமுன் […]
பள்ளிக்கரணையில் ஏரியில் பாய்ந்த கார் உள்ளே இருந்த காவலாளி உயிரிழப்பு

பள்ளிக்கரணையில் கட்டுபாட்டை இழந்த கார் ஏரியில் பாய்ந்து முழுகியது. காரில் இருந்த தனியார் ஐ.டி நிறுவன பாதுகாவலர் உயிரிழப்பு. ஓட்டுனர் தப்பி கரை சேர்ந்தார் சென்னை அடுத்த சிறுச்சேரியில் உள்ள தனியார் ஐ.டி நிறுவனத்தில் ஒப்பந்த முறையில் கார் ஓட்டுனராக பணி செய்பவர் ராஜசேகர்(33), அதே ஐ.டி நிறுவனத்தில் இரவு பாதுகாவலராக பணி செய்பவர் பீஹார் மாநிலத்தை சேர்ந்த கெளஷல்குமார்(27), வழக்கம் போல் இரவு பணி முடித்த ஐ.டி ஊழியர்களை பாதுகாவலர் கெளஷல்குமார் பாதுகாப்புடன் ஓட்டுனர் ராஜசேகர் […]