நடிகர் விஜய் குறித்து வேல்முருகன் பேசியதற்கு தமிழிசை சௌந்தரராஜன் கண்டனம் தெரிவித்துள்ளார். மாணவ, மாணவிகள் விஜய்யை அண்ணா என அழைப்பது அன்பின் வெளிப்பாடு என கூறியுள்ளார். இது அரசியலுக்கு அப்பாற்பட்ட அழைப்பு, அந்த உறவை கொச்சைப்படுத்துவது, குழந்தைகள் மற்றும் பெற்றோரின் மனதை புண்படுத்தும் செயலாகும் என சாடியுள்ளார். மேலும் இது தமிழ் பண்பாடும் அல்ல, மனிதநேயமும் அல்ல என்றும் விமர்சித்துள்ளார்.