
தமிழக சட்டசபையில் இன்று ஆளுநர் உரையை ஆர். என். ரவியால் படிக்க முடியவில்லை. இதனால் அவர் வந்த சில நிமிடங்களில் வெளியேறினார்.இந்தப் பிரச்சனைகளை தவிர்க்க ஆண்டின் தொடக்கத்தில் ஆளுநர் உரை என்ற நடைமுறையை விலக்கிடும் வகையில் அரசமைப்புச் சட்டத்தைத் திருத்துவதற்கான முயற்சிகளை இந்தியா முழுவதும் இருக்கும் ஒத்த கருத்துகளைக் கொண்ட அரசியல் கட்சிகள் துணையோடு நாடாளுமன்றத்தில் திமுக முன்னெடுக்கும்” என தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.