முதலமைச்சர்‌ மு.க.ஸ்டாலின்‌ சென்னை கலைவாணர்‌ அரங்கத்தில்‌, நடைபெற்ற விழாவில்‌, புதிய பயனாளிகளாக தேர்ந்தெடுக்கப்பட்ட 7 இலட்சத்து 35 ஆயிரம்‌ மகளிர்‌ பயன்பெறும்‌ வகையில்‌, மகளிருக்கு மாதந்தோறும்‌ ரூ.1000/–& வழங்கிடும்‌ கலைஞர்‌ மகளிர்‌ உரிமைத்‌ திட்டத்தை தொடங்கி வைத்து அடையாளமாக 6 மகளிருக்கு வங்கி பற்று அட்டைகளை (110 605) வழங்கினார்‌. இந்நிகழ்ச்சியில்‌, இளைஞர்‌ நலன்‌ மற்றும்‌ விளையாட்டு மேம்பாட்டுத்‌ துறை அமைச்சர்‌ உதயநிதி ஸ்டாலின்‌, இந்து சமயம்‌ மற்றும்‌ அறநிலையத்‌ துறை அமைச்சர்‌ பி.கே.சேகர்பாபு, பெருநகர சென்னை மாநகராட்சி மேயர்‌ ஆர்‌.பிரியா, நாடாளுமன்ற உறுப்பினர்கள்‌ தயாநிதிமாறன்‌, கலாநிதி வீராசாமி, சட்டமன்ற உறுப்பினர்கள்‌, தலைமைச்‌ செயலாளர்‌ சிவ்‌ தாஸ்‌ மீனா, பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையர்‌ டாக்டர்‌ ஜெ.ராதாகிருஷ்ணன்‌, சிறப்பு திட்டசெயலாக்கத்துறை செயலாளர்‌ டாக்டர்‌ தாரேஸ்‌ அகமது, உள்ளாட்சி அமைப்புகளின்‌ பிரதிநிதிகள்‌ மற்றும்‌ அரசு உயர்‌ அலுவலர்கள்‌ கலந்து கொண்டனர்‌.