
கொல்கத்தா: மேற்கு வங்கத்தில் உள்ள தாஹேர்பூர் ஹெலிபேடில் பிரதமர் நரேந்திர மோடியின் ஹெலிகாப்டர் இன்று (டிச.20) அப்பகுதியில் நிலவிய அடர்ந்த மூடுபனியால் ஏற்பட்ட காட்சித் தெளிவின்மை காரணமாக தரையிறங்க முடியாமல் கொல்கத்தாவுக்கு திரும்பியது.
இன்று காலையில் பிரதமர் மோடியின் ஹெலிகாப்டர் தாஹேர்பூர் ஹெலிபேட் தளத்தின் மீது சிறிது நேரம் வட்டமிட்ட பிறகு, யூ-டர்ன் அடித்து கொல்கத்தா விமான நிலையத்துக்கே திரும்பியது என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.