
கடலூா் மாவட்டம், சிதம்பரம் அருகே உள்ள பிச்சாவரம் சுரபுன்னை காடுகளில் அரிய வகை பொன்நிற குள்ள நரிகள் அதிகம் உள்ளதை வனத் துறையினா் கண்டறிந்துள்ளனா்.
இந்த சுரபுன்னை காடுகளில் நீா்நாய் மற்றும் பொன்னிற குள்ள நரிகள் அதிகளவில் உள்ளது வனத் துறையினரால் கண்டறியப்பட்டுள்ளது. இவைகள் மீன், நண்டு, இறால் போன்றவற்றை உண்டு வாழ்கின்றன. குள்ள நரிகள் அலையாத்திக் காடுகளின் தூய்மைப் பணியாளராக கருதப்படுகின்றன.