சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் நில அபகரிப்பில் ஈடு பட்ட 2 முக்கிய குற்றவாளிகளை தனித்தனி வழக்குகளில் தேடி வந்தனர். ரூ.3 கோடி மதிப்பிலான நிலத்தை போலி ஆவணங்கள் மூலம் அபகரித்ததாக கடந்த 2021-ம் ஆண்டு முதல் சுமதி (வயது 49) என்ற பெண்ணை தேடி வந்தனர். சென்னை சிட்லப்பாக்கத்தை சேர்ந்த இவர் நேற்று முன்தினம் கைது செய்யப்பட்டார். நீதிமன்ற காவலில் அவரை போலீசார் சிறையில் அடைத்தனர்.இதே யில் பெண்கள் போன்று போலியான நில ஆவணங்களை தயாரிப்பதில் பலே கில்லாடியான ராகேஷ் (36) என்பவரையும் மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.அவர் ரூ.2கோடி மதிப்பிலான நிலத்தை போலி ஆவணங்கள் மூலம் அபகரித்து மோசடி செய்த வழக்கில் போலீசாரிடம் சிக்காமல் தலைமறை வாக இருந்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. முக்கிய குற்றவா ளிகளான இவர்கள் 2 பேரை கைது செய்த மத்திய குற்றப்பிரிவு போலீசாருக்கு கமிஷனர் அருண் பாராட்டு தெரிவித்தார்.