தமிழக அரசின் மின்​துறை செயல​ராக இருந்த பீலா வெங்​கடேசன், உடல்​நலக் குறை​வால் பாதிக்​கப்​பட்ட நிலை​யில் கடந்த 2 மாதங்​களாக சென்னை கொட்​டி​வாக்​கத்​தில் உள்ள அவரது வீட்​டில் ஓய்​வில் இருந்து வந்​தார். இந்​நிலை​யில், நேற்று மாலை உடல்​நிலை மோசமடைந்து கால​மா​னார். அவருக்கு வயது 56.

கன்​னி​யாகுமரி மாவட்​டத்​தைச் சேர்ந்த பீலா வெங்​கடேசன், 1969-ம் நவ.11-ல் பிறந்​தார். தாயார் ராணி வெங்​கடேசன் சாத்​தான்​குளம் தொகு​தி​யின் முன்​னாள் காங்​கிரஸ் எம்​எல்​ஏ​வாக இருந்​துள்​ளார். தந்தை வெங்​கடேசன், தமிழக காவல்​துறை டிஜிபி​யாக பதவி வகித்து ஓய்வு பெற்​றவர். எம்​பிபிஎஸ் படித்​துள்ள பீலா வெங்​கடேசன், கடந்த 1997-ம் ஆண்டு ஐஏஎஸ் அதி​காரி​யா​னார்.

2019 பிப்​ர​வரி முதல் 2020 ஜூன் மாதம் வரை கரோனா பெருந்​தொற்று காலத்​தில் சுகா​தா​ரத் துறை செயல​ராக பணி​யாற்றினார். அதன்​பின் வணி​கவரி மற்​றும் பத்​திரப்​ப​திவுத் துறை செயலர், கைத்​தறித்​துறை ஆணை​யர், நில சீர்​திருத்​தத்​துறை ஆணை​யர் பொறுப்​பு​களை வகித்​தார். இறு​தி​யாக மின்​துறை செயல​ராக பணி​யாற்றி வந்​தார்.
புற்றுநோய் காரணமாக அவர் மரணமடைந்ததாக தெரியவந்துள்ளது இவரது கணவர் தான் போலீஸ் அதிகாரி ராஜேஷ் தாஸ் .பாலியல் புகாரில் 3 ஆண்டு சிறை தண்டனை பெற்றவர் மேலும் பீலா வெங்கடேசன் உடலுக்கு முதலமைச்சர் மு க ஸ்டாலின் அஞ்சலி செலுத்தினார்