மணிப்பூரில் மைதே​யி, குகி குழுக்​கள் மற்​றும் மத்​திய அரசு இடையே சுமுக உடன்​பாடு எட்​டப்​பட்டு உள்​ளது. இதைத் தொடர்ந்து தேசிய நெடுஞ்​சாலையை திறக்க குகி நிர்​வாகக் குழு ஒப்​புக் கொண்​டுள்​ளது. அந்த மாநிலத்​தில் விரை​வில் அமைதி திரும்​பும் என்று எதிர்​பார்க்​கப்​படு​கிறது. கடந்த 2023-ம் ஆண்டு மே மாதம் மணிப்​பூரில் மைதே​யி, குகி சமு​தா​யத்​தினர் இடையே மோதல் ஏற்​பட்​டது. மாநிலம் முழு​வதும் கலவரம் வெடித்து 258 பேர் உயி​ரிழந்​தனர்.