பா.ம.க தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ், ‘எக்ஸ்’ சமூகவலைதள பக்கத்தில் கூறியிருப்பதாவது:
சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தில் போலீசாரால் கொல்லப்பட்ட அஜித்குமார் என்ற இளைஞரை சித்ரவதை செய்யும்படி, போலீஸ் சூப்பிரண்டுக்கு கூட தகவல் தெரிவிக்காமல் போலீஸ் துணை சூப்பிரண்டை தொடர்பு கொண்டு காவல்துறை உயர் அதிகாரி ஒருவர் ஆணையிட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளன. அந்த அதிகாரி யார்? என தமிழக அரசு விளக்கமளிக்க வேண்டும். இந்த வழக்கு சி.பி.ஐ.க்கு மாற்றப்பட்டுவிட்டாலும், தமிழக காவல்துறையை சீர்திருத்த இத்தகைய அதிகாரிகளை அடையாளம் கண்டு தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது