சென்னை திருச்சி நெடுஞ்சாலையில் பக்ரீத் விடுமுறை, முகூர்த்த நாள் காரணமாக சொந்த ஊர் திரும்பிய மக்கள் ஒரே நேரத்தில் சென்னை திரும்புவதாலும், லேசான மழை பெய்து வருவதாலும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. 5 கிலோ மீட்டர் தூரத்திற்கு வாகனங்கள் வரிசை கட்டி நிற்கின்றன. போக்குவரத்தை சரி செய்யும் பணியில் காவல்துறையின் ஈடுபட்டு வருகின்றனர்.