
சென்னை மணலி காமராஜர் நகரை சேர்ந்தவர் பொம்மி (வயது 60 ) உறவினர்கள் திருப்பதி சென்றபோது இவர் வீட்டில் சுவர்களுக்கு இடையே கிடந்த வீடு துடைக்கும் மாப் எடுக்க சென்றார். அப்போது சுவர்களுக்குள் சிக்கி வெளியே வர முடியாமல் கூச்சல் போட்டார் .இது பற்றி தகவல் அறிந்ததும் தீயணைப்பு படையினர் 3 மணி நேரம் போராடி அவரை மீட்டனர். அவருக்கு லேசான சிராய்ப்பு காயங்கள் ஏற்பட்டன.
அதற்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.