பல்லாவரம் தொகுதியில் 1, 2, 3 ஆகிய மண்டலங்களை சேர்ந்த 200 பேருக்கு புதிய ரேஷன் கார்டுகள் வழங்கப்பட்டன. இ.கருணாநிதி எம்.எல்.ஏ புதிய ரேஷன் கார்டுகளை வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் துணை மேயர் கோ.காமராஜ் மண்டலக்குழு தலைவர்கள் ஜோசப் அண்ணாதுரை, வே.கருணாநிதி, மாமன்ற உறுப்பினர்கள் புசிரா பானு நாசர், மங்கையர் திலகம் ராஜ்குமார், டிவி ராஜா, கீதா நாகராஜன், லதா சிவக்குமார், ரேணுகாதேவி பரமசிவம், மகேஸ்வரி கார்த்திகேயன், கலைச்செல்வி வெங்கடேசன், பிரேமலதா பண்டரி நாதன், முத்துக்குமார் மற்றும் பரங்கிமலை ஒன்றியத்துக்கு உட்பட்ட கூட்டுறவு அதிகாரிகள், பொதுமக்கள் பெருமளவில் கலந்து கொண்டனர்.