பல்லாவரம் தொகுதியில் 22 புதிய மின்மாற்றிகள்

பல்லாவரம் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி நிதி ஒரு கோடியே 16 லட்சத்தில் 22 மின்மாற்றிகள் அமைக்கப்பட்டு சட்டமன்ற உறுப்பினர் இ.கருணாநிதி திறந்துவைத்தார் பல்லாவரம் தொகுதியில் பல்வேறு இடங்களில் குறைந்த மின் அழுத்த ஏற்படுவதாக எழுந்த புகாரின் பேரில் பல்லாவரம் சட்டமன்ற உறுப்பினர் இ.கருணாநிதி தொகுதி நிதி ஒரு கோடியே 16 லட்சம் மதிப்பீட்டில் பல்லாவரம், குரோம்பேட்டை, அஸ்தினாபுரம், நெமிலிச்சேரி, பம்மல் மற்றும் பொழிச்சலூர் ஊராட்சி என 22 இடங்களில் புதிய மின்மாற்றி அமைக்கப்பட்டது, இதனை சட்டமன்ற உறுப்பினர் […]

குரோம்பேட்டையில் நடிகை ஆண்ட்ரியா தொடங்கி வைத்த வாக்கத்தான் போட்டி

குரோம்பேட்டையில் பார்வதி மருத்துவமனை சார்பில் அனைவருக்கும் சேர்த்தல் என்ற கருப்பொருளில் ஐந்தாம் ஆண்டு வாக்கத்தான் போட்டியில் முதியவர்கள், மாற்றுத்திறனாளிகள் உட்பட 5000 க்கும் மேற்பட்டோர் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர். இதனை நடிகை ஆண்ட்ரியா, பல்லாவரம் சட்டமன்ற உறுப்பினர் இ.கருணாநிதி ஆகியோர் கொடியசைத்து துவக்கி வைத்தனர். சிட்லபாக்கம் எம். ஐ .டி கல்லூரி விளையாட்டு திடலில் குரோம்பேட்டை பார்வதி மருத்துவமனை சார்பில் அனைவருக்கும் சேர்த்தல் என்ற கருப்பொருளில் அதன் 5வது ஆண்டு பெருநடை (வாக்கத்தான்) போட்டி நடைபெற்றது.சிறப்பு அழைப்பாளர்களாக […]

தாம்பரம் மாநகராட்சி கிழக்கு தாம்பரம் வார்டு & 48க்குட்பட்ட, வேளச்சேரி பிரதான சாலை, பூண்டி பஜார் பகுதியில் தூய்மையின் சேவைக்கான (Swachatta Hi Seva) விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் கல்லூரி மற்றும் பள்ளி மாணவ, மாணவிகள் கலந்து கொண்ட மாராத்தான் ஓட்டப்பந்தயத்தில் வெற்றி பெற்ற மாணவ / மாணவியர்களுக்கு

பல்லாவரம் சட்டமன்ற உறுப்பினர் திரு.இ.கருணாநிதி, அவர்கள் மற்றும்மாநகராட்சி ஆணையர் திரு.சீ.பாலச்சந்தர்,இ.ஆ.ப., அவர்கள் பரிசுக் கோப்பைகள் மற்றும் சான்றிதழ்களை வழங்கினர். இந்நிகழ்ச்சியில் மண்டலக்குழு தலைவர் திரு.சு.இந்திரன், மாமன்ற உறுப்பினர்கள், மாநகராட்சி அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் உட்பட பலர் உள்ளனர்.

நகராட்சி நிர்வாக இயக்குநர் திரு.சு.சிவராசு, இ.ஆ.ப., அவர்கள் தாம்பரம் மாநகராட்சி சிட்லபாக்கம் பகுதியில் அமைந்துள்ள MIT கல்லூரி வளாகத்தில் தூய்மையின் சேவைக்கான (Swachatta Hi Seva)விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் கல்லூரி மாணவ, மாணவிகள் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்ட மாரத்தான் ஓட்டப்பந்தயத்தை கொடி அசைத்து தொடங்கி வைத்தார்

இந்நிகழ்ச்சியில் தாம்பரம் மாநகராட்சி ஆணையர் திரு.சீ.பாலச்சந்தர், இ.ஆ.ப., பல்லாவரம் சட்டமன்ற உறுப்பினர் திரு.இ.கருணாநிதி, மாநகராட்சிதுணை மேயர் திரு.கோ.காமராஜ், மண்டலக்குழு தலைவர்கள் திரு.வே.கருணாநிதி, திரு.ஜோசப் அண்ணாதுரை, மாமன்ற உறுப்பினர்கள், மாநகராட்சி அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

பல்லாவரம் பகுதியில் 200 பேருக்கு புதிய ரேஷன் கார்டு

பல்லாவரம் தொகுதியில் 1, 2, 3 ஆகிய மண்டலங்களை சேர்ந்த 200 பேருக்கு புதிய ரேஷன் கார்டுகள் வழங்கப்பட்டன. இ.கருணாநிதி எம்.எல்.ஏ புதிய ரேஷன் கார்டுகளை வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் துணை மேயர் கோ.காமராஜ் மண்டலக்குழு தலைவர்கள் ஜோசப் அண்ணாதுரை, வே.கருணாநிதி, மாமன்ற உறுப்பினர்கள் புசிரா பானு நாசர், மங்கையர் திலகம் ராஜ்குமார், டிவி ராஜா, கீதா நாகராஜன், லதா சிவக்குமார், ரேணுகாதேவி பரமசிவம், மகேஸ்வரி கார்த்திகேயன், கலைச்செல்வி வெங்கடேசன், பிரேமலதா பண்டரி நாதன், முத்துக்குமார் மற்றும் […]

பல்லாவரத்தில் கருணாநிதி நினைவு நாள்

முத்தமிழ் அறிஞர் கலைஞரின் 6ம் ஆண்டு நினைவு நாள் பல்லாவரம் தொகுதி திமுக சார்பில் குரோம்பேட்டையில் சட்டமன்ற உறுப்பினர் இ.கருணாநிதி தலைமையில் திமுகவினர் மலர்துவி புகழ் அஞ்சலி செலுத்தினார்கள். முத்தமிழ் அறிஞர் கலைஞரின் 6 ம் ஆண்டு நினைவுநாளையொட்டி பல்லாவரம் தொகுதி திமுக சார்பாக குரோம்பேட்டையில் மலர் அளங்காரம் செய்யப்பட்ட கலைஞரின் திரு உருவப்படத்திற்கு சட்டமன்ற உறுப்பினர் இ.கருணாநிதி தலைமையில் தாம்பரம் துணை மேயர் ஜி.காமராஜ், மண்டலகுழு தலைவர்கள் ஜோசப் அண்ணாதுரை, வே.கருணாநிதி பகுதி செயலாளர்கள் பெர்ணட், […]

பல்லாவரத்தில் மறைமலை அடிகளார் பிறந்த நாள் விழா

தமிழ்வளர்ச்சி துறை சார்பில் தனித்தமிழ் இயக்க தந்தை மறைமலை அடிகளாரின் 148 வது பிறந்தநாள் விழா, அமைச்சர் தா.மோ.அன்பரசன் மாலை அணிவித்து மறியாதை செய்தார் தனித்தமிழ் இயக்கத் தந்தை மறைமலையடிகளாரின் 148வது பிறந்தநாளை யொட்டி பல்லாவரம் மறைமலை அடிகல் தெருவில் உள்ள அவர் வாழ்ந்த இல்லத்தில் தமிழ் வளர்ச்சி துறை சார்பில் அன்னாரின் திரு உருவ சிலைக்கு மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டது. இதில் சிறு குறு நடுத்தர தொழில் நிறுவனங்களின் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன், பல்லாவரம் சட்டமன்ற […]

குரோம்பேட்டையில் கருணாநிதி பிறந்த நாளில் பெண்களுக்கு இலவச புடவை

குரோம்பேட்டை, அஸ்தினாபுரத்தில் அமைச்சர் தா.மோ.அன்பரசன் தலைமையில் கலைஞர் பிறந்தநாள் விழா, பல்லாவரம் சட்டமன்ற உறுப்பினர் இ.கருணாநிதி உள்ளிட்டோர் பங்கேற்ற நிலையில் பகுதி செயலாளர்கள் ஜோசப் அண்ணாதுரை, கருணாகரம் ஆகியோர் ஏற்பட்ட்டில் 1000 பேரூக்கு இனிப்புகளுடன் புடவைகள் வழங்கப்பட்டது. மறைந்த முன்னாள் முதலமைச்சர் முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞரின் 101 வது பிறந்தநாளையொட்டி குரோம்பேட்டை, அஸ்தினாபுரம் ஆகிய பகுதிகளில் அமைச்சர் தா.மோ.அன்பரசன் தலைமையில் பல்லாவரம் சட்டமன்ற உறுப்பினர் இ.கருணாநிதி உள்ளிட்ட திமுகவினர் கலைஞரின் திரு உருவபடத்திற்கு மலர்தூவி மறியாதை […]

குரோம்பேட்டை ஜிஎஸ்டி சாலையில் திமுக தண்ணீர் பந்தல் திறப்பு

பல்லாவரம் தெற்கு பகுதி திமுக சார்பில் குரோம்பேட்டையில் ஜி.எஸ்.டி சாலையில் தண்ணீர் பந்தலை பல்லாவரம் எம்எல்ஏ இ.கருணாநிதி திறந்து வைத்தார். சென்னை குரோம்பேட்டை ஜி.எஸ்.டி சாலையில் அதிக அளவு வணிக நிறுவனங்கள் செயல்படுகிறது. நாள் தோரும் பல ஆயிரம் பேர் வந்து செல்கிறார். கடும் கோடை வெயில் நிலவுவதால் மக்களின் தாகத்தை போக்கும் விதமாக அங்கு பல்லாவரம் தெற்கு பகுதி திமுக சார்பில் குரோம்பேட்டையில் அமைக்கப்பட்ட தண்ணீர் பந்தலை பல்லாவரம் எம்எல்ஏ இ.கருணாநிதி திறந்து வைத்து குளிர்ச்சி […]

திருப்பெரும்புதூர், நாடாளுமன்ற தொகுதி இந்தியா கூட்டணியின் வேட்பாளர் டி.ஆர்.பாலு எம்.பியை ஆதரித்து, தாம்பரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பெருங்களத்தூர் தெற்கு பகுதியில் மருதம், பாரதிதாசன் நகர், குறிஞ்சி நகர், நைல், இந்திரா நகர், டி.டி.கே.நகர், அர்ச்சனா நகர், 10வது வார்டு ஆகிய இடங்களில் உள்ள குடியிருப்போர் நலச்சங்க நிர்வாகிகளை, உதயசூரியன் சின்னத்திற்கு வாக்களிக்குமாறு, தாம்பரம் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.ஆர்.ராஜா நேரில் சந்தித்து ஆதரவு திரட்டினார்

இந்நிகழ்வில் 4வது மண்டல குழு தலைவர் டி.காமராஜ், பெருங்களத்தூர் தெற்கு பகுதி செயலாளர் எஸ்.சேகர், தலைமை பொதுக்குழு உறுப்பினர் ஆர்.எஸ்.சங்கர், மாமன்ற உறுப்பினர் ச.இராஜேஸ்வரி. வட்ட செயலாளர் கு.வெங்கடேசன் மற்றும் திமுகவினர் பங்கேற்றனர்.