10 சென்ட் நிலம் வாங்க முன்பணம் 13 லட்சம் கொடுத்த நிலையில் நிலத்தை வேறு ஒரு நபருக்கு விற்கப்பட்டதால் நெடுங்குன்றம் பிரதான சாலையில் திருநங்கைகள் சாலை மறியல்

வாகனங்கள் செல்ல முடியாமல் மர துண்டுகளை போட்டும் சாலையில் அமர்ந்தும் போக்குவரத்துக்கு தடை ஏற்படுத்தியதால் பரபரப்பு

தாம்பரம் அடுத்த நெடுங்குன்றம் ஊராட்சியில் திருநங்கைகள் பலர் வசித்து வருகின்றனர். அவர்களின் எதிர்காலத்திற்காக அதே ஊரைச் சேர்ந்த விஜி என்பவரிடம் ஒரு செண்ட் இடம் ₹3,30,000 என 10 சென்ட் 33 லட்சம் பேரம் பேசி அதற்கான இடத்திற்காக 13 லட்சம் ரூபாய் கடந்த ஆறு வருடங்களுக்கு முன்பாக முன் பணமாக கொடுத்துள்ளனர்.

படிப்பறிவு இல்லாதால் திருநங்கைகள் விஜயை நம்பி வாய்வழி உத்திரவாதத்தின் பெயரில் 13 லட்சம் ரூபாய் கொடுக்கப்பட்ட நிலையில் அந்த இடம் தற்போது வேறு ஒரு நபருக்கு அதிக விலைக்கு விற்கப்பட்டுள்ளது.

இதனை அறிந்த திருநங்கைகள் நெடுங்குன்றம் பிரதான சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்படட்டுள்ளது.

தாம்பரம் மற்றும் பெருங்களத்தூரில் இருந்து கேளம்பாக்கம் மற்றும் வண்டலூரை இணைக்கும் இந்த சாலையை பிரதானமாக பலர் பயன்படுத்தி வரும் நிலையில் தற்போது சாலை மறியலில் ஈடுபட்டுள்ளதால் வாகனங்கள் நீண்ட வரிசையில் காத்திருக்கிறது

பீர்க்கான்கரணை காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து திருநங்கைகளிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகின்றனர்.