தாம்பரம் அடுத்த அகரம் தென் பிரதான சாலையில் ஜெயராஜ் என்பவருக்கு சொந்தமான மூன்று அடுக்குகள் கொண்ட முருகன் பல் பொருள்
அங்காடி இயங்கி வந்தது.

இந்த நிலையில் இரவு மூடும்போது இரண்டாம் தளத்தில் திடீரென தீபற்றியது.

இதனால் உள்ளே பணியாட்கள் அவசரமாக வெளியேற்றப்பட்டனர். மேலும் தீயணைப்பு துறை, மின்சாரவாரியத்திற்கு தகவல் அளிக்கப்பட்டது. இதனையடு தாம்பரம் தீயணைப்பு நிலையத்தில் இருந்து ஒரு வாகனத்தில் வந்த வீரர்கள் தீயை அணைக்க முற்பட்டனர். அதற்குள் தீ கொளுந்துவிட்டு எரிந்ததால் மேல் தளத்திற்கும் அதிகமாக எரிந்து கீழே விழும் நெருப்புகளால் கிழ்தளத்திற்கும் தீ பறவியது, இதனால் மேலும் ஒரு தீயணைப்பு வாகனத்தில் வந்த வீரர்களும் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். அதே வேளையில் மக்கள் கூட்டம் அதிகமானதால் அப்பகுதியில் தடைகளை ஏற்படுத்தி போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

ஒரு மணிநேர கடும் முயற்சிக்கு பின்னர் தீயை முழுமையாக கட்டுப்படுத்தினார்கள்.

இதனால் பல லட்சம் மதிப்புள்ள பொருள்கள் தீக்கரையானது. சம்பவம் குறித்து சேலையூர் போலீசார் வழக்கு பதிவு செய்து மின் கசிவினால் தீவிபத்து ஏற்பட்டதா என்கிற கோணத்தில் விசாரணை செய்து வருகிறார்கள்…