நாடு முழுவதும் கொரோனா தொற்றால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை தினசரி அதிகரித்து வருகிறது. இதுவரை பாதிப்பே இல்லாத இமாச்சலப் பிரதேசத்திலும் நேற்று ஒருவருக்கு தொற்று உறுதியாகியுள்ளது. இந்தச் சூழலில், ஹாஸ்பிடல்களில் போதிய ஆக்ஸிஜன்கள், படுக்கைகள், மருந்துகளை இருப்பு வைக்குமாறு மாநில அரசுகளுக்கு, மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. இதனால், மீண்டும் ஒரு மினி லாக்டவுன் வருமோ? என்ற அச்சம் எழுந்துள்ளது.