
மணிப்பூரில் மைதேயி, குகி குழுக்கள் மற்றும் மத்திய அரசு இடையே சுமுக உடன்பாடு எட்டப்பட்டு உள்ளது. இதைத் தொடர்ந்து தேசிய நெடுஞ்சாலையை திறக்க குகி நிர்வாகக் குழு ஒப்புக் கொண்டுள்ளது. அந்த மாநிலத்தில் விரைவில் அமைதி திரும்பும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த 2023-ம் ஆண்டு மே மாதம் மணிப்பூரில் மைதேயி, குகி சமுதாயத்தினர் இடையே மோதல் ஏற்பட்டது. மாநிலம் முழுவதும் கலவரம் வெடித்து 258 பேர் உயிரிழந்தனர்.