
தனது மகள் மீது மாமனார், மாமியார் தாக்குதல் நடத்தியதாக கடந்தாண்டு மாங்காடு காவல்நிலையத்தில் ரஞ்சனா நாச்சியார் போக்சோ வழக்கு கொடுத்திருந்தார்.
இப்போது அவரே பேருந்து படிக்கட்டில் பயணம் செய்த பள்ளி மாணவர்களை அடித்து தண்டித்த விவகாரம் சர்ச்சைக்குரியதாக மாறியுள்ளது.
சமூக ஆர்வத்தில் ஆளாளுக்கு சட்டத்தைக் கையில் எடுத்தால்..???
சட்டம் எதற்கு? போலிஸ் எதற்கு?
நீதிமன்றம் எதற்கு? நிர்வாகம் எதற்கு?
என்ற கேள்விகளும் எழுந்துள்ளன.
இயக்குநர் பாலாவின் உடன்பிறந்த அண்ணன் மகளான நடிகை ரஞ்சனா நாச்சியார், ‘துப்பறிவாளன்’, ‘இரும்புத்திரை’, ‘அண்ணாத்த’, ‘டைரி’, ‘நட்பே துணை’ உள்ளிட்ட படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்.
டைரி படத்தில் இவர் பேசிய, “போலிஸ்னா அடிப்பீங்களா” என்ற வசனமும் பிரபலமானது.