பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டியை மரபுபடி காலை 7 மணிக்கு தெடாங்காமல் துணை முதல்வர் உதயநிதிக்காக ஒன்றரை மணி நேரம் தாமதப்படுத்தி, போட்டியை காண வந்த மக்களையும், போட்டியில் பங்கேற்ற மாடுபிடி வீரர்கள், காளைகள், அதன் உரிமையாளர்களை வேதனைப்படுத்தலாமா? என்று சட்டப்பேரவை எதிர்கட்சித் துணைத்தலைவர் ஆர்பி.உதயகுமார் கேள்வி எழுப்பியுள்ளார்.ஜல்லிக்கட்டு போட்டியை ஸ்டாலினுக்காகவும் உதயநிதிக்காகவும் நடத்துவது போல் குடும்ப விழா ஆக்குவதா என்று அவர் கேள்வி கொடுத்தார்