பாஜக கூட்டணியில் ஓபிஎஸ் நீடிப்பாரா?

பாரதிய ஜனதா கூட்டணியில் நீடித்து வந்த ஓ பன்னீர்செல்வம் அணியினர் எடப்பாடி தலைமையிலான அண்ணா திமுக அந்த அணிக்கு வந்த பிறகு தாங்கள் புறக்கணிக்கப்படுவதாக கருதுகிறார்கள். இது தொடர்பாக இன்று இறுதியான முடிவை ஓ. பன்னீர்செல்வம் எடுக்க இருக்கிறார். அவர் தனது ஆதரவாளருடன் ஆலோசனை நடத்துகிறார் . பாரதிய ஜனதா கட்சி எங்களை தவிர்க்க முடியாது என்று ஓபிஎஸ் அணியின் வைத்திலிங்கம் நேற்று தெரிவித்தார்

எடப்பாடி பிறந்தநாளுக்கு அண்ணாமலை வாழ்த்து

அதிமுக பொதுச் செயலாளர்எடப்பாடி பழனிச்சாமி இன்று தனது பிறந்த நாளை கொண்டாடினார் அவருக்கு தமிழக பாரதி ஜனதாவின் முன்னாள் தலைவர் அண்ணாமலை வாழ்த்து தெரிவித்துள்ளார் அண்ணன் பழனிசாமி , நல்ல உடல் நலத்துடன், நீண்ட ஆயுளுடன் தனது மக்கள் பணிகள் தொடர, இறைவனை வேண்டிக் கொள்கிறேன்.- என அண்ணாமலை.கூறி உள்ளார்

சிட்லபாக்கத்தில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பிறந்தநாள் விழா

தமிழக முன்னாள் முதல்வர் ஜெ.ஜெயலலிதாவின் 77-வது பிறந்தநாளையொட்டி, செங்கல்பட்டு மேற்கு மாவட்டம், செம்பாக்கம் – சிட்லபாக்கம் பகுதி கழகம் சார்பில், பகுதி கழக செயலாளர் இரா. மோகன் ஏற்பாட்டில், 34-வது வார்டில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகளை மாவட்ட கழக செயலாளர் சிட்லபாக்கம் ச. இராசேந்திரன் வழங்கினார். உடன் மாவட்ட எம்.-ஜி.ஆர் இளைஞர் அணி செயலாளர் ஜி.எஸ். புருஷோத்தமன், 34 –வது வார்டு வட்ட செயலாளர் ரவி, அவைத்தலைவர் என். பாஸ்கரன், ஜெ. முரளி (எ) […]

தேர்தல் ஆணையத்துக்கு இடைக்கால தடை

அதிமுக பொதுச்செயலாளர் பதவி தொடர்பாக விசாரணை நடத்த தேர்தல் ஆணையத்துக்கு இடைக்கால தடை எடப்பாடி பழனிசாமி தொடர்ந்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு எடப்பாடி பழனிசாமி மனுவுக்கு ஜன.27ஆம் தேதிக்குள் பதில் அளிக்க தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவு

சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் உள்ள மாஸ்டர் நீதிமன்றத்தில், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆஜர்

அறப்போர் இயக்கத்திற்கு எதிரான அவதூறு வழக்கில் டிசம்பர் 11ம் தேதி மீண்டும் ஆஜராக உத்தரவு

அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் கைது செய்ததை கண்டித்து விழுப்புரம் மாவட்டத்தில் திண்டிவனம், விக்கிரவாண்டி டோல்கேட் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் அதிமுக தொண்டர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்

எனக்கு எந்த சம்மனும் வரவில்லை : சபாநாயகர் அப்பாவு!

நான் ஏதோ ஒரு கருத்தை சொல்லியதாக அதிமுக வழக்கறிஞர் ஒருவர் வழக்கு பதிவு செய்துள்ளார். அது சம்பந்தமான எந்த விதமான சம்மனும் எனக்கு இதுவரை வரவில்லை. எனது சென்னை அலுவலகத்திலோ அல்லது முகாம் அலுவலகத்திற்கோ வரவில்லை. அனைத்து உதவியாளர்களிடமும் இது பற்றி விசாரித்து உறுதி செய்து கொண்டேன். இருப்பினும் பத்திரிகை செய்திகளின் வாயிலாக நான் நீதிமன்ற சம்மனை மறுத்து திருப்பி அனுப்பி விட்டதாக கூறப்பட்டிருக்கிறது. நான் நீதிமன்றத்தை மதிக்கக் கூடியவன் வருகிற 13ம் தேதி சம்மன் வந்தாலும் […]

தாம்பரத்தில் அதிமுக ஆர்ப்பாட்டம்

தாம்பரம் மாநகராட்சி நிர்வாகத்தை கண்டித்து செம்பாக்கம் பேரூந்து நிலையத்தில் அதிமுக முன்னாள் அமைச்சர் பா.வளர்மதி தலைமையில் கண்டன ஆர்பாட்டம் நடைபெற்றது. செங்கல்பட்டு மேற்கு மாவட்ட செயலாளர் சிட்லப்பாக்கம் ச.ராஜேந்திரன் முன்னிலை வகித்தார். சிட்லபாக்கம்-, செம்பாக்கம் பகுதி செயலாளர் மோகன், முன்னாள் அமைச்சர் டி.கே.எம் சின்னையா, முன்னாள் எம்.எல்.ஏ ப.தன்சிங், மாநகராட்சி எதிர்கட்சி தலைவர் சேலையூர்.ஜி.சங்கர், சாந்தி புருஷோதமன், மாடம்பாக்கம் தேவேந்திரன், உள்ளிட்ட 1000க்கும் மேற்படட் அதிமுக நிர்வாகிகள் கலந்துக்கொண்டனர்.