வீட்டில் சிக்கன் பிரியாணி சாப்பிட்ட தம்பியுடன் தகராறு

பிளஸ் ஒன் மாணவன் தூக்கு போட்டு தற்கொலை

தாம்பரத்தில் சோக சம்பவம்

சென்னை அடுத்த தாம்பரம் ரங்கநாதபுரம் ஆறாவது குறுக்கு தெருவை சேர்ந்தவர் பாபு குவைத்தில் வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி சந்தியா இவர்களுக்கு தாரிஸ் வயது 16 கோகுல் என்ற இரண்டு மகன்கள் உள்ளனர். தாரிஸ் தாம்பரத்தில் உள்ள தனியார் பள்ளியில் பிளஸ் ஒன் படித்து வந்தார்.

தீவிர சைவ பிரியரான தாரிஸ் அசைவ உணவுகளை சாப்பிட மாட்டார். இதனால் வீட்டில் அசைவ உணவு செய்யாமல் இருந்து வந்தனர். இந்த நிலையில் கடந்த 17ஆம் தேதி பக்ரீத் பண்டிகையின் போது தாரிசின் தம்பி கோகுல் அருகில் நண்பர்கள் கொடுத்த சிக்கன் பிரியாணியை வீட்டில் வைத்து சாப்பிட்டுள்ளார். இதில் அண்ணன் தம்பியிடேயே தகராறு ஏற்பட்டுள்ளது.

நேற்று வீட்டில் தனி அறையில் வெளியில் வராமல் தாரிஸ் இருந்துள்ளார்.

இரவில் வெகு நேரம் ஆகியும் வெளியில் வராததால் உள்ளே பார்த்தபோது தூக்கில் தொங்கிய நிலையில் இருந்துள்ளார். உடனடியாக அவரை தாம்பரத்தில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு மருத்துவர்கள் அவரை சோதனை செய்தபோது அவர் இறந்தது தெரிய வந்தது. இந்த சம்பவம் பற்றிய தகவல் கிடைத்தவுடன் மாணவன் தாரிசின் உடலை குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்த தாம்பரம் போலீசார் இது தொடர்பாக விசாரணை நடத்தி வருகிறார்கள்.

வீட்டில் சிக்கன் பிரியாணி சாப்பிட்டதில் ஏற்பட்ட தகராறில் பள்ளி மாணவன் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தாம்பரத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.