சபரிமலை ஐயப்பன் கோவில் இன்று இரவு 11 மணி வரையே பக்​தர்​கள் தரிசனத்​துக்​காக அனும​திக்​கப்​படு​வர். நாளை காலை பந்தளராஜ வம்ச பிர​தி​நி​தி​யின் சிறப்பு வழி​பாட்​டுக்​குப் பிறகு காலை 6.30 மணிக்கு நடை​சாத்​தப்பட உள்​ளது. இதனைத் தொடர்ந்து இந்த ஆண்டு மகரஜோதி வழி​பாடு​கள் அனைத்​தும் நிறைவு பெறுகின்​றன. பின்​பு, கும்​பம் மாத (மாசி) வழி​பாட்​டுக்​காக பிப்​.12-ம் தேதி மாலை கோயில் நடை திறக்​கப்​படும்.