
மேடவாக்கம் பகுதியை சேர்ந்தவர் ராஜமாணிக்கம் (70) கார்பெண்டரான இவர் அப்பகுதியில் கிடைக்கும் சிறு சிறு வேலைகளை செய்து வந்துள்ளார்.
நேற்று இரவு முதியவர் ராஜமாணிக்கம் வசித்து வந்த வீட்டில் இருந்து புகை வருவதை கண்ட அக்கம்பக்கத்தினர் உடனடியாக பள்ளிகரனை போலீசாருக்கு தகவல் அளித்தனர். சம்பவ இடத்திற்க்கு வந்த போலீசார் பொதுமக்களுடன் இணைந்து தீயை அணைத்த பின்பு பார்த்த போது படுக்கையில் ராஜமாணிக்கம் உடல் முழுவதும் கருகிய நிலையில் உயிரிழந்து கிடந்துள்ளார்.
உடலை கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து நடத்திய முதற்கட்ட விசாரணையில் ராஜமாணிக்கம் புகை பிடிக்கும் பழக்கம் உடையவர் என்பதும் இரவு தூங்கும் போது கொசுவர்த்தி ஏற்றுவது வழக்கம் என்பதால் எதிர்பாரதவிதமாக தீபற்றி எரிந்ததில் முதியவர் சிக்கி உயிரிழந்திருக்க வாய்ப்புள்ளதாக தெரிவித்தனர்.