
தாம்பரம் அருகே நெஞ்சக மருத்துவமனை எதிரில் சாலையை கடக்க முயன்ற காவலாளி மீது மினி வேன் மோதியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
சென்னை குரோம்பேட்டை மும்மூர்த்தி நகரை சேர்ந்தவர் சேர்ந்தவர் பெருமாள் (77) தாம்பரத்தில் உள்ள தனியார் வங்கி ஏ.டி.எம் மில் காவலாளியாக வேலை பார்த்து வந்தார்.
இன்று காலை வழக்கம் போல் பணியை முடித்துவிட்டு தாம்பரம் சானடோரியம் நெஞ்சக நோய் மருத்துவமனை எதிரே சாலையை கடக்க முயன்ற போது பல்லாவத்தில் இருந்து தாம்பரம் நோக்கி அதிவேகமாக வந்த மினி வேன் மோதியதில் தூக்கி வீசப்பட்டவர் ரத்த வெள்ளத்தில் உயிரிழந்தார்.
இதனால் அதிர்ச்சியடைந்த ஓட்டுனர் சம்பவ் இடத்தில் மினி வேனில் இருந்து தப்பி சென்றார்.
தகவல் அறிந்து வந்த சிடலப்பாக்கம் போக்குவரத்து புலனாய்வு போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து தப்பி ஓடிய வேன் ஓட்டுனரை தேடி வருகின்றனர்.