மாண்புமிகு ஒன்றிய பாதுகாப்புத்‌ துறை அமைச்சர்‌ திரு.ராஜ்நாத்‌ சிங்‌ அவர்கள்‌ முத்தமிழறிஞர்‌ கலைஞர்‌ அவர்களின்‌ நூற்றாண்டு நினைவு நாணயத்தை வெளியிட, மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர்‌ திரு.மு.க.ஸ்டாலின்‌ அவர்கள்‌ பெற்றுக்கொண்டார்‌. இந்நிகழ்வின்போது, மாண்புமிகு நீர்வளத்‌ துறை அமைச்சர்‌ திரு.துரைமுருகன்‌ உள்ளிட்ட அமைச்சர்‌ பெருமக்கள்‌, மாண்புமிகு ஒன்றிய இணை அமைச்சர்‌ திரு. எல்‌.முருகன்‌, நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள்‌, உள்ளாட்சி அமைப்புகளின்‌ பிரதிநிதிகள்‌, தலைமைச்‌ செயலாளர்‌ திரு.சிவ்‌ தாஸ்‌ மீனா, இ.ஆ.ப. பொதுத்‌ துறை செயலாளர்‌ திருமதி.ரீட்டா ஹரீஷ்‌ தக்கர்‌, இ.ஆ.ப. மற்றும்‌ அரசு உயர்‌ அலுவலர்கள்‌ ஆகியோர்‌ உடனிருந்தனர்‌.