
கட்டிட அனுமதிக்கு லஞ்சம் கேட்ட தாம்பரம் மாநகராட்சி கட்டிட வரைபட திட்ட ஆய்வாளர் கைது.
தாம்பரம் மாநகராட்சி, இரண்டாவது மண்டலத்தில் உள்ள நகர அமைப்பு பிரிவில் கட்டிட அனுமதி பெறுவதற்கு லஞ்சம் பெறப்பட்டு வருவதாக தொடர் புகார் எழுந்து வந்தது.
இந்நிலையில் புரோக்கர் ஒருவர் மூலம் கட்டிட அனுமதிக்கு லஞ்சம் கேட்டதாக மவுண்ட் லஞ்ச ஒழிப்புத் துறையில் புகார் தெரிவிக்கப்பட்டது.
இதனை தொடர்ந்து டிஎஸ்பி பாஸ்கர் தலைமையிலான சிறப்பு குழுவினர் குரோம்பேட்டை, சிஎல்சி ஒர்க்ஸ் ரோட்டில் உள்ள தனியார் மருத்துவமனை அருகே புரோக்கர் ஒருவரை பிடித்து அவரிடம் விசாரணை நடத்தியதில் இரண்டாவது மண்டல அலுவலக கட்டிட வரைபட திட்ட ஆய்வாளர் நாகராஜ் என்பவருக்கு தான் லஞ்சம் வாங்குவதாக ஒப்புக்கொண்டதை எடுத்து லஞ்ச ஒழிப்பு போலீசார் நாகராஜை கைது செய்து அழைத்து சென்றனர்.