
இ.சி.எஸ். 10 ஓவர் கிரிக்கெட் போட்டி இங்கி லாந்தில் நடந்து வருகிறது. இதில் நேற்று முன் தினம் இரவு நடந்த ஆட்டத்தில் லண்டன் கவுண்டி, கில்ட்போர்ட் அணியை எதிர் கொண்டது. இதில் முதலில் பேட் செய்த லண் டன் கவுண்டி அணி 10 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 226 ரன்கள் குவித்தது. 28 பந்து களில் சதத்தை எட்டிய லண்டன் கவுண்டி அணி வீரர் உஸ்மான் கானி (ஆப்கானிஸ் தான்) 153 ரன்களுடன் (43 பந்து, 11 பவுண்டரி, 17 சிக்சர்) ஆட்டமிழக்காமல் இருந்தார். முன் னதாக அவர் வில் அர்னி வீசிய ஒரே ஓவரில் (8-வது ஓவர்) 45 ரன்கள் திரட்டி புதிய சாதனை படைத்தார். ஒரு வைடு, 2 நோ பால் உள்பட 5 சிக்சர், 3 பவுண்டரிகளுடன் இந்த ரன் வந்தது. இதற்கு முன்பு 2022-ம் ஆண்டு உள்ளூர் கிரிக்கெட் போட்டியில் இந்திய வீரர் ருதுராஜ் கெய்க்வாட் ஒரு ஓவரில் 43 ரன்கள் எடுத்ததே ஒட்டுமொத்த கிரிக்கெட்டில் அதிகபட்சமாக இருந்தது. பின்னர் ஆடிய கில்ட்போர்ட் அணி 4 விக்கெட்டுக்கு 155 ரன்களே எடுத்தது. இதனால் லண்டன் கவுண்டி அணி 71 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.