செங்கல்பட்டு மாவட்டம் தாம்பரம் மாநகராட்சியில் பொதுமக்களிடையே 100% வாக்களிப்பதன் முக்கியத்துவம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்திடும் வகையில் தாம்பரம் சண்முகா சாலை மார்க்கெட் பகுதியில் தேர்தல் குறித்து விழிப்புணர்வு உறுதி மொழியினை மாவட்ட தேர்தல் அலுவலர் / செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் ச.அருண்ராஜ் தலைமையில் மாநகராட்சி அலுவலர்கள், மற்றும் பொதுமக்கள் ஏற்றுக் கொண்டனர். உடன் தாம்பரம் மாநகராட்சி ஆணையாளர் ஆர்.அழகுமீனா உட்பட பலர் கலந்து கொண்டனர்.