ஆனால் அது மக்கள் பேசும் மொழி அல்ல. இதனால் நாடு முழுவதும் உள்ள மக்களுக்குப் புரியும் மொழியில், அவா்களை நீதிமன்றங்களால் சென்றடைய முடியவில்லை.

இதைக் கருத்தில் கொண்டு, கடந்த ஓராண்டாக உச்ச நீதிமன்றத்தின் அனைத்துத் தீா்ப்புகளும் மொழிபெயா்க்கப்பட்டு வருகின்றன. இதுவரை செயற்கை நுண்ணறிவு உதவியுடன் பல்வேறு மொழிகளில் 31,000 தீா்ப்புகள் மொழிபெயா்க்கப்பட்டுள்ளன. மக்களிடம் நீதிமன்றங்கள் சென்றடைய வேண்டும் என்பதே இதன் நோக்கம்.

அமெரிக்க உச்ச நீதிமன்றம் சராசரியாக ஓராண்டில் 80 வழக்குகளில் தீா்ப்பளிக்கிறது. அதேவேளையில், இந்த ஆண்டு இதுவரை இந்திய உச்ச நீதிமன்றம் 72,000 வழக்குகளில் தீா்ப்பளித்துள்ளது. இது இந்திய உச்ச நீதிமன்றம் எவ்வாறு பணியாற்றுகிறது என்பதை எடுத்துக்காட்டுகிறது.

அமெரிக்காவில் நீதிபதி பதவி என்பது வாழ்நாள் முழுவதுமான பணிக் காலமாக உள்ளது. தனது வாழ்நாள் முழுவதும் ஒருவா் நீதிபதியாக நீடிக்க இந்திய அரசமைப்புச் சட்டம் இடம் அளிக்கவில்லை.

இந்தியாவில் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ஓய்வுபெறும் வயது 65-ஆக உள்ள நிலையில், அதை நீட்டிப்பதா வேண்டாமா என்பது குறித்து நாடாளுமன்றம் தான் முடிவு செய்ய வேண்டும்.

நீதிபதிகள் குறிப்பிட்ட காலத்தில் ஓய்வுபெற வேண்டியது அவசியம். அப்போதுதான் அவா்களுக்கு அடுத்து வரும் நீதிபதிகளால் கடந்த கால தவறுகளை சுட்டிக்காட்டி, சமூக வளா்ச்சிக்காக சட்ட கோட்பாடுகளை மறுசீரமைக்க முடியும் என்று தெரிவித்தாா்.