சபரிமலை தங்கம் திருட்டு வழக்கில் இதுவரை 7பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். தற்போது வழக்கு விசா​ரணை​யின்​போது சபரிமலை ஐயப்​பன் கோயில் துவார பால​கர் சிலைகளுக்கு தங்க முலாம் பூசிய சென்​னையை சேர்ந்த ஸ்மார்ட் கிரியேஷன்ஸ் நிறு​வனத்​தின் தலைமை செயல் அதி​காரி பங்​கஜ் பண்​டாரி நேற்று கைது செய்​யப்​பட்டார்.

துவார பால​கர் சிலைகளில் இருந்து திருடப்​பட்ட தங்​கத்தை கர்​நாட​கா​வின் பெல்​லாரியை சேர்ந்த ஜூவல்​லரி உரிமை​யாளர் கோவர்​தன் வாங்​கிய​தாக குற்​றம் சாட்​டப்​பட்டு உள்​ளது. அவரும் கைது செய்​யப்​பட்டு உள்​ளார். இருவரையும் அதிகாாிகள் திரு​வனந்​த​புரத்​துக்கு அழைத்து சென்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த உள்ளனர்.