
விஜயலட்சுமிக்கு எந்த தொந்தரவும் கொடுக்க மாட்டேன் என்றும், விஜயலட்சுமி மீதான அவதூறு கருத்துக்களையும், குற்றச்சாட்டுகளையும் வாபஸ் பெற்றுக் கொள்கிறேன் என்றும், இந்த விவகாரத்தில் மன்னிப்பு கோரி சீமான் விளக்க மனு தாக்கல் செய்ய வேண்டும். அப்படி செய்தால் அவர் மீதான பாலியல் வழக்கை ரத்து செய்வது குறித்து யோசிப்போம். தவறும்பட்சத்தில் சீமான் தாக்கல் செய்துள்ள இந்த மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்படும்’’ எனக்கூறி சீமான் மீதான பாலியல் வழக்கு விசாரணைக்கு விதிக்கப்பட்ட இடைக்காலத் தடையை வரும் செப்.24 வரை நீட்டித்தும், சீமானுக்கு கெடு விதித்தும் உத்தரவிட்டுள்ளனர்.