ஐகோர்ட்டில், சமூக ஆர்வலர் டேவிட் மனோகர் என்பவர் தாக்கல் செய்துள்ள பொதுநல மனுவில், “குரோம்பேட்டை, பல்லாவ ரம், ஜி.எஸ்.டி. சாலை பகுதிகளில் மழைக்காலங்களில் கடுமை யான வெள்ளப்பெருக்கு ஏற்படுகிறது. இதற்கு சாலையோர கால் வாய்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றாததும், குப்பைகளை கொட்டுவதை தடுக்காததும்தான் முக்கிய காரணம். பெரும்பா லான இடங்களில் மழைநீர் வடிகால் வசதியும் இல்லை.

பல்லாவரம் பெரிய ஏரியில் இருந்து வெளியேறும் தண்ணீர் குரோம்பேட்டை வெற்றி தியேட்டருக்கு எதிரே செல்லும் ஏ கால்வாய், தாம்பரம் அரசு ஆஸ்பத்திரி அருகே செல்லும் கால்வாய், பல்லாவரம் பாண்ட்ஸ் சிக்னல் அருகே செல்லும் கால்வாய் ஆகியவற்றின் மூலம் வெளியேறும். ஆனால், இந்த கால்வாய்கள் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதால் மழைநீர் செல்ல வழியின்றி சாலைகளில் வழிந்தோடி தாழ்வான பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்படுகிறது.

எனவே, மழைக்காலம் நெருங்கும் முன்பாக இப்பகுதிகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை முழுமையாக அகற்ற தமிழ்நாடு தலைமை செயலாளர், பொதுப்பணித்துறை செயலாளர், மாவட்ட கலெக்டர் உள்ளிட்டோருக்கு மனு அனுப்பியும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை” என்று கூறியிருந்தார். இந்த வழக்கு தலைமை நீதிபதி எம்.எம்.ஸ்ரீவத்சவா, நீதிபதி ஜி.அருள் ஏ முருகன் ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது. மனுதாரர் தரப்பில் வக்கீல் ஒய்.கவிதா ஆஜராகி வாதிட்டார்.இதையடுத்து நீதிபதிகள், இந்த வழக்கிற்கு 3 வாரத்துக்குள் பதில் அளிக்க வேண்டும் என்று தலைமைச்செயலாளர், செங்கல்பட்டு கலெக் டர் உள்ளிட்டோருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டனர்