
திருப்பதி அலிபிரியிலிருந்து செர்லோபள்ளி செல்லும் சாலையில் நேற்று இரவு பைக்கில் சென்ற ஒருவர் மீது திடீரென சிறுத்தை ஒன்று ஓடி வந்து பைக்கில் சென்றவரை தாக்க முயன்றது. இதில் பைக்கில் சென்றவர் நொடிப் பொழுதில் தப்பினார். பைக்கை பின் தொடர்ந்து சென்ற காரில் உள்ள கேமிராவில் இந்த காட்சிகள் பதிவாகியுள்ளது.
சிறுத்தையை கூண்டு வைத்து பிடிக்க வனத்துறையினர் திட்டமிட்டுள்ளன