பல்லாவரம், குரோம்பேட்டை பகுதி யில் நீர்நிலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண் டும். சாலைகளை சீரமைக்க வேண்டும். பல்லாவரம் பெரிய ஏரியில் கழிவுநீர் கலப்பதை தடுக்க வேண்டும். குரோம் பேட்டைராதாநகர் நாயுடு ஷாப் பகுதியில் பல ஆண்டுகளுக்கு முன்பு போடப்பட்ட சிறு பாலத்தை உடைத்து விட்டு புதிய பாலம் கட்டவேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி குரோம்பேட்டை கட்டபொம்மன் குறுக்கு தெரு வைச் சேர்ந்த கோதண்டபாணி (வயது 74) என்ற முதியவர், தாம்பரம் மாநகராட்சி அலுவலக நுழைவு வாயில் அருகே தரையில் அமர்ந்து போராட்டம் நடத்தினார். அவரிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். இதுபற்றி மாநகராட்சி அதிகாரிகளை சந்தித்து பேசி தீர்வு காணும்படி கூறினர்.

அதற்கு அவர்,‘பலமுறை புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை.எம்.எல்.ஏ. வீட்டு அருகிலேயே இந்த நிலை உள்ளது. மழை பெய்தால் எங்கள் வீட்டின் உள்ளே தண் ணீர் வருகிறது. இதுபற்றி கூறியும் மாநகராட்சி நடவடிக்கை எடுக்கவில்லை’ என்றார். இதையடுத்து மாநகராட்சி அதி காரிகள் பேச்சுவார்த்தை நடத்தி, இது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறி முதியவரை அங்கிருந்து அனுப்பி வைத்தனர்.