
தன்னையும் பாஜக-வையும் விமர்சிப்பவர்களுக்கு பதிலடி கொடுப்பதற்காக கோவையில் பிரத்யேக வார் ரூம் ஒன்றை வைத்திருந்தார் அண்ணாமலை. வார் ரூம் மூலமாக அண்ணாமலை தன்னை பிரதானப்படுத்திக் கொள்வதாக குற்றச்சாட்டுகள் கூட கிளம்பின. தலைவர் பதவியை இழந்த பிறகு அந்த வார் ரூமின் செயல்பாடுகளை சுருக்கியவர், தற்போது அதைக் கலைத்து பெங்களூருவுக்கும் டெல்லிக்கும் இரண்டு பிரிவாக மாற்றிவிட்டதாகச் சொல்கிறார்கள். மறு உத்தரவு வரும் வரை வேறு வேலைகள் கிடைத்தால் பார்க்கும்படி கோவை வார் ரூம் ஆட்களை அண்ணாமலை அறிவுறுத்தி இருப்பதாகச் சொல்கிறார்கள்.