
திருவான்மியூர் மருந்தீஸ்வரர் கோயிலில்
நேற்று மாலை கோபுரத்தில் இருந்து தவறி விழுந்து சிவனடியார் உயிரிழப்பு
உழவாரப் பணி செய்தபோது நேர்ந்த துயரம்
திருவான்மியூரில் உள்ள மருந்தீஸ்வரர் கோயிலில்( உழவாரப்பணி) சுத்தம் செய்வதற்காக சிவனடியார்கள் சுமார் 30 நபர்கள் இன்று வந்தனர்.
இதில் கொட்டிவாக்கத்தைச் சேர்ந்த பழனி(44) என்பவர் கோபுரத்தில் ஏரி சுத்தம் செய்யும்போது தவறி கீழே விழுந்துள்ளார்.
தலையில் அடிபட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் ராயப்பேட்டை மருத்துவமனைக்கு அழைத்து சென்று சிகிச்சைக்கு சேர்த்தனர்.
சிகிச்சை பலனின்றி சற்றுமுன் உயிரிழந்தார்.
திருவான்மியூர் போலீசார் விசாரணை.