சென்னை பள்ளிக்கரணை அடுத்த பெரும்பாக்கம், எழில் நகர், 5வது பிளாக்கை சேர்ந்தவர் செல்ஃபியோ மேரி (23). இவரது கணவர் சூரி இவர்களுக்கு ஐந்து வயது குழந்தை உள்ளது.

 செம்மஞ்சேரியை சேர்ந்தவர் விஜய் (30).  தனியார் தண்ணீர் சுத்திகரிப்பு நிலையத்தில்   வேலை செய்து வந்தார். இவரது மனைவி  உமா. இவர்களுக்கு மூன்று வயதில் ஒரு குழந்தை உள்ளது. 

இந்த நிலையில் சில ஆண்டுகளாக செல்ஃபியா மேரிக்கும், விஜய்க்கும் கள்ளக்காதல் இருந்துவந்தது.

இந்த நிலையில் கடந்த ஆறு மாதங்களுக்கு முன் இரண்டு குடும்பத்தாருக்கும் இவர்களது கள்ளக்காதல் விவகாரம் தெரியவந்துள்ளது. இந்தப் பிரச்சனையில் கணவரை பிரிந்த செல்ஃபியா மேரியும், மனைவியை பிரிந்து வந்த விஜயும் தனியாக வீடு வாடகை எடுத்து குடும்பம் நடத்தி வந்துள்ளனர்.

  இந்த நிலையில் நேற்று இரவு 9.30 மணிக்கு  செல்ஃபியா மேரி தனது தோழி ரேகாவிற்கு செல்போனில் மெசேஜ் அனுப்பி இருந்தார்.  அதில்  என் வீட்டார்  எங்களை வாழ விட மாட்டார்கள். அதனால் நாங்கள் இருவரும் தூக்கு போட்டு   தற்கொலை செய்து கொள்கிறோம் என அனுப்பி இருந்தார். இதை படித்து பார்த்து அதிர்ச்சி அடைந்த தோழி ரேகா பெரும்பாக்கம் காவல் நிலையத்திலற்கு தகவல் கொடுத்தார். 

  இதை அடுத்து போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பார்த்தபோது வீட்டின் ஹாலில் விஜய் தனது சால்வையால் தூக்கு போட்டு‌ இறந்து கிடந்தார். படுக்கை அறையில் செல்ஃபியா மேரி தனது புடவையால் தூக்கு போட்டு இறந்து கிடந்தார். இதை அடுத்து போலீசார் இருவர் உடலையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை  செய்து வருகிறார்கள். 

இந்த சம்பவத்தால் பெரும்பாக்கம் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.