பல்லாவரம் வேல்ஸ் சிக்னல் அருகே புத்தேரியை ஒட்டி, பொருத்தப்பட்டிருந்த 50 அடி உயரம் கொண்ட ராட்சத பேனர் கடந்த 2 நாட்களுக்கு முன்பு பலத்த காற்றுடன் மழை பெய்தபோது பாதியாக உடைந்து ஏரிக்குள் விழுந்துள்ளது. இதனால் யாருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை. அதேநேரத்தில் வெளியிலும் தெரியவில்லை. ஆனால் உடைந்து விழுந்த பேனர் காற்றில் பறந்து வாகன போக்குவரத்து நிறைந்த ரேடி யல் சாலையில் விழுந்து இருந்தால் பெரும் அசம்பாவிதம் ஏற்பட்டிருக்கும் என வாகன ஓட்டிகள் தெரிவித்தனர்.