
ஹில்டன் பள்ளி மாணவி S.M.ஜெயப்பிரதா நடந்த பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் (2023&2024) தமிழில் 91/100, 485/500 பெற்று பள்ளியில் இரண்டாம் இடத்தை பெற்றிருந்தார். மறு கூட்டலுக்குப் பிறகு தமிழ் மதிப்பெண்கள் 96/100 மாற்றப் பெற்று மொத்த மதிப்பெண்கள் 490/500 ஆக உயர்ந்தன. ஆகவே அவர் முதல் இடத்தை அடைந்தார். இதனை பெருமை கொள்ளும் வகையில், ஹில்டன் பள்ளியின் தாளாளர், தலைமை ஆசிரியர், ஆசிரியர்கள், பெற்றோர்கள், மாணவர்கள் மற்றும் அனைத்து பணியாளர்களும் வாழ்த்து தெரிவித்தனர்.