ரயிலில் குளித்த பயணி ஒருவரை ரயில்வே துறை அடையாளம் கண்டு அவர் மீது நடவடிக்கை எடுத்துள்ளது. ஒரு ரயிலில் பயணி ஒருவர் கழிப்பறைக்கு அருகில் நின்று வாளி மற்றும் குவளையுடன் சோப் போட்டு குளிப்பது போன்ற வீடியோ அண்மையில் சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவியது. இதற்கு பலர் அதிர்ச்சியும் கண்டனமும் தெரிவித்தனர்.

மேலும் பலர் அந்தப் பயணி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினர். இந்நிலையில் வீடியோவில் காணப்பட்ட அந்த நபரை அடையாளம் கண்டு அவர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ரயில்வே அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.உத்திரபிரதேசத்தில் உள்ள ஜான்சி ரயில் நிலையத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளது.